தமிழகத்தில் மாற்றம்! துளி அல்ல பெரும் அலை! பிரதமர் மோடி வரவேற்பால் பாஜக பொதுச்செயலாளர் நம்பிக்கை
சென்னை: ‛‛சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி உணர்ச்சி அலையில் வரவேற்ற மக்கள் மத்தியில் பயணம் செய்தார். மாற்றம் வரும்போது அது துளியாக இருக்காது. மாறாக அலையாக இருக்கும்'' என படங்களை பகிர்ந்து பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் பிஎல் சந்தோஷ் பெருமையாக கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று சென்னை வந்தார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் பல்வேறு திட்ட பணிகளை துவங்கி வைத்தார்.
தமிழகத்தில் பணிகள் முடிந்த திட்டங்களை துவங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, புதிய திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டினார். இந்த திட்ட பணிகளின் மொத்த மதிப்பீடு ரூ.31,400 கோடியாகும்.

ஒரேமேடையில் மோடி - ஸ்டாலின்
இந்த விழாவில் முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் ஒரே மேடையில் பங்கேற்றனர். முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி ஐதராபாத்தில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு விமானத்தில் வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் அடையாறு வந்தார். அங்கிருந்து காரில் சாலை மார்க்கமாக நேரு உள் விளையாட்டு அரங்கத்தை சென்றடைந்தார். அவரது கார் நேப்பியர் பாலம், சிவானந்தா சாலை, பெரியார் சிலை சந்திப்பு, பல்லவன் சாலை, சென்ட்ரல் ரெயில் நிலையம் எதிரில் உள்ள பாலத்தின் வழியாக சென்று பூந்தமல்லி நெடுஞ்சாலை, பெரியமேடு வழியாக நேரு உள் விளையாட்டு அரங்கை அடைந்தது.

பிரதமருக்கு உற்சாக வரவேற்பு
பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜக தொண்டர்கள் சாலையோரம் நின்று கைகளை அசைத்தும், மோடி வாழ்க கோஷமிட்டும் வரவேற்றனர். நீண்ட தூரத்துக்கு தொண்டர்கள் அணிவகுத்து வரவேற்றதால் பிரதமர் நரேந்திர மோடி கார் கதவை திறந்து கைகளை அசைத்து உற்சாகத்தை வெளிப்படுத்தினார். இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக மக்கள் கொடுத்த வரவேற்பு தொடர்பான படங்களை பதிவிட்டு பாஜக தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மாற்றம் துளியாக அல்ல... அலையாக..
தற்போது பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் பிஎல் சந்தோஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில், ‛‛எண்ணிக்கை எப்போதும் சிறப்பு வாய்ந்தது தான். ஆனால் உணர்வுகள் சில நேரம் அதிகமானதாகிவிடும். இன்று(அதாவது நேற்று) அப்படி ஒரு நாள். பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் உணர்ச்சி அலையில் வரவேற்ற மக்கள் மத்தியில் பயணம் செய்தார். மாற்றம் வரும்போது அது துளியாக இருக்காது. மாறாக அலையாக இருக்கும்'' என குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் தமிழகத்தில் பாஜக மாற்றத்தை ஏற்படுத்தும் எனவும், அது துளியாக அல்ல. அலையாக இருக்கும் எனவும் பிஎல் சந்தோஷ் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் அமித்ஷா
முன்னதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛தமிழகம் பிரதமர் நரேந்திர மோடியை விரும்புகிறது. பிரதமர் மோடி மீது அன்பும், பாசமும் தமிழகத்தில் பெருகி வருகிறது'' என குறிப்பிட்டு்ளளார். இதேபோல் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சிடிரவி உள்பட ஏராளமான தலைவர்கள் தமிழகத்தில் பிரதமர் மோடியை வரவேற்ற படங்களை பகிர்ந்து தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
-
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
மகாபலிபுரம் டூ எண்ணூர்.. இந்தியாவின் மிக முக்கிய ரோடு.. மின்னல் வேகத்தில் தயார் ஆகும் 10 வழிச் சாலை -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
சென்னை - அரக்கோணம் மின்சார ரயில் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி.. கோடை காலத்தில் இனி நிம்மதியாக போலாம் -
பாஜக விரிக்கும் '60 சீட்' வலை.. விஜயுடன் டெல்லி கடைசி கட்டப் பேச்சுவார்த்தை.. உறுதியாகும் கூட்டணி? -
தமிழகத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும்.. போட்டியின்றி தேர்வு! -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி! -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
வேலூரில் 100 டிகிரியை தொட்ட வெயில்.. பாலாறு உருகிடுச்சி! மக்கள் பாதிப்பு! -
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க












Click it and Unblock the Notifications