லாபி.. பிளான் போட்ட 'சூத்திரதாரி'.. எடப்பாடிக்கு தான் சிக்கல்.. ஓபிஎஸ் டீம் சொல்லும் பரபர கணக்கு!
சென்னை : எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச் செயலாளர் என்று குறிப்பிட்டதும் தவறு, அனுப்பிய முகவரியும் தவறு, இந்தக் கடிதம் உச்ச நீதிமன்றத்தில் ஈபிஎஸ் தரப்புக்குத்தான் சிக்கலாக அமையும் எனக் கூறியுள்ளார் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி. அடுத்தடுத்த 3 சம்பவங்கள் மூலம், எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கி வருவதாகக் கூறப்படும் நிலையில், இதனால் ஓபிஎஸ்ஸுக்கு பின்னடைவே இல்லை என திட்டவட்டமாக மறுத்திருக்கிறார் புகழேந்தி.
இந்திய சட்ட ஆணையம் அதிமுக பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியிருப்பதன் மூலம், மத்திய அரசு எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என இந்திய சட்ட ஆணையம் அனுப்பிய கடிதத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது, எனவே ஈபிஎஸ்ஸுக்கு அனுப்பிய கடிதத்தை திரும்ப பெற வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு சட்ட ஆணையத்திற்கு கடிதம் எழுதியது.

ஈபிஎஸ்ஸுக்கு அங்கீகாரம்?
அதிமுகவில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே ஒற்றைத் தலைமை தொடர்பாக மோதல் ஏற்பட்ட நிலையில், அதிமுக பொதுக்குழுவில், கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் வழக்கு தொடுத்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் பொதுக்குழு தொடர்பான வழக்கு ஜனவரி 4ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. இந்நிலையில், தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமி சமர்ப்பித்த வரவு செலவு கணக்கை ஏற்று சமீபத்தில் இணையதளத்தில் வெளியிட்டது. இதனால், அவரை கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளராக அங்கீகரித்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கூறி வருகின்றனர்.

டெல்லியில் ஈபிஎஸ் பலம்
அதற்கு முன்னதாக, ஜி20 மாநாடு பற்றிய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க மத்திய அரசு அனுப்பிய அழைப்புக் கடிதத்திலும் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம், மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதினார். தான் தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்றும், எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளர் என குறிப்பிடக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டார். இந்த நிலையில், தற்போது மத்திய சட்ட ஆணையமும் எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளர் எனக் குறிப்பிட்டு கடிதம் எழுதியுள்ளது.

ஈபிஎஸ் டீம் உற்சாகம்
ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக அதிமுகவின் கருத்துகளை கேட்கும் வகையில் சட்ட ஆணைய தலைவரும், நீதிபதியுமான ரிதுராஜ் அவஸ்தி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று குறிப்பிட்டு, கட்சியின் கருத்தை தெரிவிக்கும்படி, கடிதம் அனுப்பி உள்ளார். அதிமுகவுக்கு யார் தலைமை பொறுப்பு வகிப்பது என ஈபிஎஸ், ஓபிஎஸ் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில், மத்திய சட்ட ஆணையம் எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளர் என ஏற்று கடிதம் அனுப்பியுள்ளது, மத்திய பாஜக அரசு எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்து உள்ளது என்பதையே காட்டுவதாக ஈபிஎஸ் தரப்பினர் கூறுகின்றனர்.

ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்
எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளர் என்று மத்திய சட்ட ஆணையம் குறிப்பிட்டதால் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது, அதனால் அந்த கடிதத்தை திரும்பப் பெற வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு சட்ட ஆணைய தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளது. எடப்பாடி பழனிசாமி வகித்து வந்த இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தான் கட்சி இயங்குகிறது.கட்சி விதிகளுக்கு எதிராக ஈபிஎஸ் செயல்பட்டு வருவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருக்கிறது, இதுபோன்ற சூழலில் எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச் செயலாளர் எனக் குறிப்பிட்டு கடிதம் எழுதி இருப்பது தேவையற்ற சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வழிவகுக்கும் என அந்தக் கடிதத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

அடுத்தடுத்து 3 மேட்டர்கள்
ஒரு மாதத்திற்குள் அடுத்தடுத்து 3 நிகழ்வுகள் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக நடைபெற்றுள்ளன. ஜி20 மாநாட்டுக்கு மத்திய அரசின் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர், எடப்பாடி பழனிசாமிக்கு இடைக்கால பொதுச் செயலாளர் என கடிதம் எழுதி அழைப்பு விடுத்தார். அப்போதே ஓபிஎஸ் கொந்தளித்து கடிதம் எழுதினார். சமீபத்தில் தேர்தல் ஆணையம், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளர் என்ற முறையில் சமர்ப்பித்த வரவு செலவு கணக்கை ஏற்று அந்த கடிதத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், சட்ட ஆணையம், எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளர் எனக் குறிப்பிட்டு கடிதம் அனுப்பியுள்ளது.

டெல்லி லாபி
எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரான தம்பிதுரை டெல்லியில் மிகுந்த செல்வாக்குடன் இருப்பதையே இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். துணை சபாநாயகராக இருந்த தம்பிதுரை, அரசின் துறைகளில் லாபி செய்து எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான மூவ்களை செய்து வருகிறார் என்று கூறப்படுகிறது. டெல்லி தங்களுக்கு ஆதரவாக இருப்பதாக ஓபிஎஸ் தரப்பு கூறி வரும் நிலையில், டெல்லியை வைத்தே எடப்பாடிக்கு சாதகமான நகர்வுகளை தம்பிதுரை முன்னெடுத்து வருகிறார். அதிமுக பிரச்சனை பற்றி அறிந்திராத துறைகளில் எல்லாம், எடப்பாடியை முன்னிறுத்தி வருகிறார் தம்பிதுரை என்கிறார்கள்.

தவறுதலாக கடிதம்
இந்நிலையில், சட்ட ஆணையம், எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பிய கடிதம் பற்றிப் பேசியுள்ள ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்புச் செயலாளர் புகழேந்தி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் என்றுதான் தேர்தல் ஆணைய குறிப்புகளில் இருக்கிறது. சமீபத்தில் நடந்த உட்கட்சி பிரச்சனைகள் தொடர்பாக தேர்தல் ஆணையம் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இப்படியான சூழலில் தெரிந்தோ தெரியாமலோ தவறுதலாக கடிதங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

அட்ரஸ் தவறு
மேலும், அதிமுக தலைமைக் கழகத்தின் முகவரியும் தவறாக உள்ளது. 226 , அவ்வை சண்முகம் சாலை என்பதுதான் உண்மையான முகவரி. ஆனால், 275 என போட்டிருக்கிறார்கள். பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என குறிப்பிட்டிருக்கிறார்கள். லாபியை வைத்து ஏதாவது செய்யலாம். ஆனால், இதுவே உச்ச நீதிமன்றத்தில் அவர்களுக்கு எதிராக முடிந்து விடும். வழக்கு நிலுவையில் இருக்கும்போது எப்படி இப்படி கடிதம் எழுதலாம் என ஈபிஎஸ் மற்றும் மத்திய அரசை உச்ச நீதிமன்றம் கேட்கும். அது எங்களுக்கு சாதகமாக அமையும் எனக் கூறியுள்ளார்.

பொதுச் செயலாளரா?
எடப்பாடி பழனிசாமி தன்னை இடைக்கால பொதுச் செயலாளர் என்று கூறிக் கொள்கிறார். அதுவே செல்லாது என்று கூறி வருகிறோம். ஆனால், இப்போது பொதுச் செயலாளர் என்று குறிப்பிட்டு கடிதம் எழுதி இருக்கிறார்கள். ஆகவே இந்த கடிதம் முழுவதுமாக தவறான ஒன்று. வேண்டுமென்றே திட்டமிட்டு 'லாபி'யை பயன்படுத்தி மூவ் செய்திருக்கிறார்கள். இதனால் ஓபிஎஸ்ஸுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனத் தெரிவித்துள்ளார் புகழேந்தி.
-
எடப்பாடி பழனிசாமிக்கு கோல்டன் வாய்ப்பு? அமித்ஷா தந்த பார்ட்னர்ஷிப் ட்விஸ்ட்! அப்ப 2.5 வருட கண்டிஷன்? -
விஜய்யின் தவெகவுடன் கூட்டணியா? அண்ணாமலையுடன் என்ன பிரச்சனை? மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி -
தென் மண்டலத்திற்கு திமுக பக்கா ஸ்கெட்ச்.. களமிறங்கிய ஓ.பன்னீர்செல்வம்.. பிரச்சாரத்தை தொடங்கினார் -
ஆமா.. அதிமுக எதற்காக பாஜகவுக்கு இன்னும் சீட் ஒதுக்கவில்லை.. பின்னணியில் நடப்பது இதுதான்! -
Kaliyammal: காளியம்மாள் மயிலாடுதுறை தொகுதியில் போட்டி? அதிமுகவில் சேர்ந்ததும் எடப்பாடி போடும் கணக்கு.. பின்னணி -
ஓபிஎஸ்ஸின் Ex ஆதரவாளர்கள் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, தர்மர் எம்பிக்கு பதவி! அப்போ காளியம்மாளுக்கு? -
பணக்காரர்களுக்கு மட்டுமே சீட்? ₹10 கோடிக்கு லீடர் தந்த ஷாக்? திமுக, அதிமுக, தவெக கடைசி நேர கண்டிஷன் -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
சசிகலாவுக்கு விழுந்த பலத்த அடி.. அஇபுதமமுக ஆரம்பமே இப்படியா? காப்பாற்ற போகும் அந்த "பெரிய கை" யார் -
50-ல் தொடங்கி 25-ல் மல்லுக்கட்டும் அதிமுக, பாஜக.. எடப்பாடி பழனிசாமி கறார் முடிவால் கூட்டணி விரிசல்? -
போக்குவரத்து ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகள்.. தமிழக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு












Click it and Unblock the Notifications