பலாத்காரம்.. விருதுநகரில் கைதான திமுக பிரமுகர்! யாரா இருந்தா என்ன? தண்டிக்க வேண்டும்: கனிமொழி அதிரடி
சென்னை: விருதுநகர் மாவட்டத்தில் 22 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டது ஆறுதலை தருகிறது என திமுக எம்பி கனிமொழி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 22 வயது பெண்ணுக்கு மேலரத வீதியை சேர்ந்த திமுக பிரமுகர் ஹரிஹரனுடன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறி, இருவரும் தனிமையில் சந்திக்க தொடங்கினர்.
அவ்வாறு ஒரு நாள் இருவரும் தனிமையில் இருந்த போது அந்த பெண்ணுக்கு தெரியாமல் உல்லாசமாக இருந்ததை ஹரிஹரன் வீடியோ எடுத்தார். இதையடுத்து தனது நண்பரான திமுக நிர்வாகி ஜீனைத் அகமது, பிரவீன் மற்றும் அதே தெருவைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் 4 பேர் என 6 பேருக்கு அந்த வீடியோவை காட்டியுள்ளார்.

22 வயது பெண்
இதையடுத்து அந்த வீடியோவை வைத்து 22 வயது இளம்பெண்ணை 7 பேரும் மாறி மாறி கடந்த 8 மாதங்களாக பலாத்காரம் செய்து வந்துள்ளதாக தெரிகிறது. நாளுக்கு நாள் இவர்களின் தொல்லையை தாங்க முடியாத அந்த பெண் தன் வீட்டருக்கே உள்ள மாடசாமி என்பவரிடம் நடந்ததை கூறியுள்ளார்.

7 பேர் பலாத்காரம்
அவர் காப்பாற்றுவார் என நினைத்த நிலையில் அவரும், அந்த வீடியோவை 7 பேரிடம் இருந்து பெற்றுக் கொண்டு அந்த பெண்ணை தனது இச்சைக்கு பயன்படுத்திக் கொண்டுள்ளார். இப்படியே மாதங்கள் கடந்தும் இவர்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்ததை அடுத்து அந்த பெண் போலீஸில் புகார் அளித்தார்.

8 பேர் கைது
அதன்பேரில் போலீஸார் திமுக நிர்வாகிகளான ஹரிஹரன், ஜீனைத் அகமதுஸ பிரவீன், மாடசாமி, 4 பள்ளி மாணவர்கள் (10, 11 ,12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள்) ஆகியோரை கைது செய்தனர். பொள்ளாச்சி சம்பவத்தை கண் முன் கொண்டு வரும் இந்த மாபாதக செயலுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

கனிமொழி ட்வீட்
அந்த வகையில் திமுக எம்பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் விருதுநகர் மாவட்டத்தில் 22 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டு இருப்பது ஆறுதலைத் தருகிறது. குற்றம் செய்தவர்கள் யாராக இருப்பினும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் பலாத்காரம்
பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவத்தில் அதிமுக பிரமுகர் ஈடுபட்டது தெரியவந்ததை அடுத்து அவர் மீதும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்போது கனிமொழி குரல் கொடுத்திருந்தார். அது போல் தற்போது விருதுநகர் விவகாரத்தில் தனது சொந்த கட்சியினரே ஈடுபட்ட போதும் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாமல் பாகுபாடின்றி தனது கண்டனத்தையும் வரவேற்பையும் பதிவு செய்துள்ளார்.

சாத்தான்குளம்
இதே போல் சாத்தான்குளத்தில் 2018 இல் லாக் அப்பில் மரணமடைந்த ஜெயராஜ், பெனிக்ஸ் சம்பவத்தில் கொதித்த கனிமொழி, அண்மையில் திமுக ஆட்சியில் வாழப்பாடியில் போலீஸாரால் தாக்குதலுக்குள்ளாகி தொழிலாளி ஒருவர் இறந்த சம்பவத்திலும் கோபத்தை கொப்பளித்தார். எந்த ஆட்சியாக இருந்தாலும் தவறு என்றால் அதை தட்டி கேட்கும் போக்கையே கனிமொழி கடைப்பிடித்து வருவதால் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications