"திராவிட காடுகாக்கும் தெம்புள்ள யானை நீ" முதல்வராக ஓராண்டு! முதல்வர் ஸ்டாலினை வாழ்த்திய வைரமுத்து!
சென்னை : தமிழக முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், ஓராண்டு ஆட்சியில் நூறாண்டுச் சாதனைகள் எனவும், திராவிடக் காடுகாக்கும் தெம்புள்ள யானை நீ என கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றது.
குறிப்பாக தனிப்பெரும்பான்மையுடன் திமுக வெற்றி பெற்று தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியை பிடித்தது.

ஓராண்டு நிறைவு
இதையடுத்து கடந்த ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி தமிழக முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டார். இன்றுடன் அவர் முதல்வராக பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்த நிலையில் திமுக ஆட்சியையும் தமிழக முதல்வரையும் பல்வேறு பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் பாராட்டி வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் அறிக்கைகள் மூலமாகவும் நேரிலும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

முதல்வருக்கு வாழ்த்து
திமுக ஆட்சியின் ஒரு வருட நிறைவை முன்னிட்டு தாயார் தயாளு அம்மாவிடம் முதல்வர் ஆசி பெற்றார். தொடர்ந்து,மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மரியாதை செலுத்த புறப்பட்ட நிலையில், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் இருந்து சென்னை மெரினா நோக்கி செல்லக்கூடிய பேருந்தில் ஏறி முதல்வர் ஆய்வு செய்து, மகளிரிடம் இலவச பயண திட்டம் குறித்து உரையாடினார். பின்னர் கருணாநிதி நினைவிடத்திற்கு புறப்பட்டு சென்று தற்போது மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

கவிஞர் வைரமுத்து
இந்நிலையில் தமிழக முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், ஓராண்டு ஆட்சியில் நூறாண்டுச் சாதனைகள் எனவும், திராவிடக் காடுகாக்கும் தெம்புள்ள யானை நீ என கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கவிஞர் வைரமுத்து, " முதலமைச்சரே! பிறையில் முழுநிலா உறைவது போல உன் ஓராண்டு ஆட்சியில் நூறாண்டுச் சாதனைகள்

தெம்புள்ள யானை நீ!
என்றாலும் எதிர்ப்பு, கொம்புள்ள யானையும் கொள்கையுள்ள தலைவனுமே குறிவைக்கப்படுகிறார்கள். கொம்பு மட்டுமா திராவிடக் காடுகாக்கும் தெம்புள்ள யானை நீ பேனாவோடு புதைக்கப்பட்ட கலைஞர் உனக்கொரு கவி வரைவார்" என பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications