'கண்கள் இருந்தால் கண்ணீர் வரும்' - திமுகவை கடைசி வரை விட்டுக் கொடுக்காத கே.எஸ்.அழகிரி
சென்னை: கண்கள் இருந்தால் கண்ணீர் வரத் தான் செய்யும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இன்னமும் இழுபறி நிலையில் தான் உள்ளது. சில நாட்களுக்கு முன், தொகுதிப் பங்கீடு குறித்த கேள்விக்கு, செய்தியாளர்களையே ஜாலியாக கலாய்த்த கே.எஸ்.அழகிரி, நேற்று (மார்ச்.5) கண்ணீரே விட்டுவிட்டார்.

காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய கே.எஸ்.அழகிரி, "திமுகவினர் நம்மை மதிக்கவில்லை. அவர்கள் சொல்லும் எண்ணிக்கைக்கு நாம் சம்மதித்தால் நாளை காங்கிரஸ் கட்சியே இருக்காது" என்று பேசிய அழகிரி ஒரு கட்டத்தில் தேம்பி அழுது கண்ணீர் விட்டார்.
இந்நிலையில் இன்று சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் விருப்ப மனு கொடுத்தவர்களிடம் நேர்காணல் தொடங்கியது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ். அழகிரி, "திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. காங்கிரஸ் கட்சியின் நேர்காணல் நடைபெற்று வருகிறது. இன்று, நாளை வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடைபெறும். இந்த நேர்காணலுக்குப் பின் திமுகவுடன் மீண்டும் பேசுவோம்" என்றார். மேலும், நேற்று அழுதுகொண்டே உரையாற்றியது குறித்து கேட்டபோது, "கண்கள் இருந்தால் கண்ணீர் வரத்தான் செய்யும்" என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.
இதற்கிடையே, எங்கள் கூட்டணிக்கு காங்கிரஸ் வந்தால், அந்த கட்சிக்கு நல்லது என்று மக்கள் நீதி மய்யம் வெளிப்படையாக அழைப்பு விடுத்துள்ளது. எனினும், டெல்லி மேலிடத்தில் இருந்து வரும் உத்தரவுகளைப் பொருத்தே தமிழக காங்கிரஸ் தனது அடுத்தக்கட்ட நடவடிக்கையை முடிவு செய்யவுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம்












Click it and Unblock the Notifications