சாதி சான்றிதழ் தாங்க சார்! சென்னையில் தீக்குளித்து போராடிய மலைக்குறவ இளைஞர்.. பரிதாபமாக பலி
சென்னை: சாதி சான்றிதழ் கோரி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்த மலைக்குறவர் சமூகத்தை சேர்ந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சாதி சான்றிதழ் கோரி நீண்ட காலமாக அலைந்து வருவதாகவும், ஆனால் எங்குமே சாதி சான்றிதழ் கொடுக்கவில்லையென்றும் அவர் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சாதி சான்றிதழ்
தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஆதி திராவிட, குறவர் ஆகிய சமூகங்களை சேர்ந்தவர்கள் சாதி சான்றிதழ் பெறுவதற்கு ஒரு பெரும் போராட்டத்தையே நடத்த வேண்டியுள்ளது. அதவும் குறவர் மற்றும் பழங்குடியின மக்கள் எனில் இவர்களுக்கு அவ்வளவு எளிதாக சான்றிதழ் கிடைத்துவிடுவதில்லை. பொதுவாக இவ்வாறு சான்றிதழ் கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு 15 நாட்களுக்குள் சான்றிதழ் அளிக்க வேண்டும். பழங்குடியின மக்களுக்கு சான்றிதழ் வழங்க 30 நாட்கள் ஆகும்.

தீக்குளிப்பு
இதுதான் அரசு சொல்லும் நடைமுறை. ஆனால், யதார்த்தத்தில் பழங்குடியின மக்கள் சான்றிதழ் பெறுவது என்பது கானல் நீராகவே இருந்து வருகிறது. அந்த வகையில் மலைக்குறவர் சமூகத்தை சேர்ந்த வேல்முருகன் எனும் நபர் தனது மகனின் சாதி சான்றிதழுக்காக வெகு நாட்களாக அலையவிடப்பட்டிருக்கிறார். இவ்வாறு இருக்கையில் நேற்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் வந்த அவர் திடீரென உடலில் பெட்ரொல் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

வாக்குமூலம்
அலறல் சத்தம் கேட்டு திரும்பி பார்த்த காவல்துறையினர், வேல்முருகனை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் சிறிது நேர போராட்டத்திற்கு பின்னர் தீயை அணைத்து அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டதில் வேல்முருகன் காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையை சேர்ந்தவர் எனவும், தனது மகனின் சாதி சான்றிதழுக்காக நீண்ட நாட்கள் அலைந்து திரிந்ததாகவும், அதிகாரிகள் அலட்சியம் செய்ததன் காரணமாகவே இவ்வாறு தீக்குளித்ததாகவும் கூறியுள்ளார்.

உயிரிழப்பு
உடலில் 90 சதவிகித தீ காயங்களுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாதி சான்றிதழ்களை குறிப்பிட்ட காலத்திற்குள் கொடுக்க வேண்டும் என்று அரசு வழிகாட்டுதல்கள் இருந்தபோதும் பழங்குடியினரும், குறவர் சமூக மக்களும் ஏன் இப்படி அலையவிடப்படுகின்றனர் என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கேள்வியெழுப்பி வருகின்றனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications