அடாது மழையிலும் விடாது நடந்த மெகா தடுப்பூசி முகாம் - ஆர்வத்துடன் ஊசி போட்ட 14,74,922 பேர்
தமிழ்நாட்டில் நேற்று நடைபெற்ற முகாம்களில் 14 லட்சத்து 74,922 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டதாக அமைச்சர் மா.சுப்ரமணியம் கூறியுள்ளார்.
சென்னை: கனமழை வெள்ளத்திலும் தமிழகம் முழுவதும் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் 14 லட்சத்து 74,922 பேருக்கு தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக அமைச்சர் மா.சுப்ரமணியம் கூறியுள்ளார். தமிழகத்தில் 72 சதவிகிதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 33சதவிகிதம் பேர் 2வது தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொண்டிருப்பதாகவும் அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் பருவமழை தீவிரமடைந்துள்ளது. பல மாவட்டங்களில் வெள்ளம் மிதக்கிறது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் நிவாரணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் மாநிலம் முழுவதும் 7 கட்டங்களாக தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன. கடந்த வாரம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தடுப்பூசி முகாம் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் 8வது கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நேற்றைய தினம் 50 ஆயிரம் இடங்களில் நடைபெற்றது, அதன்படி திருவள்ளூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குப்பம்மாசத்திரத்தில் நடைபெற்ற மருத்துவ முகாம் மற்றும் வீடு தேடி மருத்துவம் திட்டத்தை வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டத்தையும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார். அதன் பின் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெட்ஷீட், போர்வை, பால், ரொட்டி பொருட்களை அவர் வழங்கினார்.

இல்லம் தேடி மருத்துவம்
மாலையில் செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்பிரமணியன், "தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் கொரொனோ தடுப்பூசி சிறப்பு மருத்துவமுகாம் நடைபெற்றது. கடந்த சிலநாட்களாக 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்ததால் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் சுகாதார துறையினர் இல்லம் தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் அடிப்படையில் வீடுகளைத் தேடி சென்று தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.

தடுப்பூசி அவசியம்
கொரோனாவுக்கு தடுப்பூசி மட்டுமே ஒரே தீர்வு. தடுக்கி விழுந்தால் தடுப்பூசி மையம் என்ற நிலை இருப்பதால் மக்கள் தயக்கம் காட்டாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். தற்போது தமிழகத்தில் தொற்று பாதிப்பு குறைந்திருந்தாலும், உலக நாடுகள் முழுவதும் பெரிய அளவிலான பாதிப்புகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
Recommended Video

உலக நாடுகளில் அதிகரிப்பு
அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளில் நாள்தோறும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். இதனால் பெரும்பாலான உலக நாடுகள் பதற்றத்திலேயே இருக்கின்றன.

தடுப்பூசி செலுத்திய 14 லட்சம் பேர்
தமிழகத்தில் 72 சதவிகிதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 33சதவிகிதம் பேர்2-வது தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொண்டிருக்கின்றனர். தமிழ்நாட்டில் நேற்று நடைபெற்ற முகாம்களில் 14 லட்சத்து 74,922 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது எனக் கூறினார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications