மெட்ரோ ரயில் நிலையங்களில் மினிபஸ்.. தொடங்கி வைத்த முதலமைச்சர்.. எந்தெந்த வழித்தடத்தில்?
சென்னை : சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களை எளிதில் அடைவதற்காக மினி பேருந்துகள் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி மூலமாக 6 வழித்தடத்தில் அதாவது 12 பேருந்துகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.
மேலும் ராணுவத்தில் உயிர்நீத்த தமிழக வீரர்களின் குடும்பங்களுக்கு தலா 20 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

மெட்ரோவில் நிம்மதி பயணம்
சுமார் ஒன்றரை கோடி மக்கள் வசிக்கும் சென்னையில் தொடங்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் சேவையால் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயனடைகின்றனர். இதுநாள் வரை பேருந்திலும், புறநகர் ரயில்களிலும் நெரிசலில் சிக்கி பயணம் செய்து வந்தவர்கள் தற்போது ஏசி வசதி உள்ள மெட்ரோ ரயிலில் நிம்மதியாக பயணம் செய்கின்றனர். அது மட்டுமின்றி தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு குறிப்பிட்ட நேரத்தில் எந்தவித போக்குவரத்து நெரிசல் பிரச்சனையும் இல்லாமல் சென்றுவிடுகின்றனர்.

3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை
தற்போது விம்கோ நகரில் இருந்து அண்ணா சாலை வழியாக விமான நிலையம் வரை ஒரு வழித்தடத்திலும், சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையம் வரை மற்றும் சென்ட்ரல் முதல் கோயம்பேடு வழியாக செயின்ட் தாமஸ் மவுண்ட் வரை 2வது வழித்தடத்திலும் இயக்கப்பட்டு வருகிற்து. தற்போது மெட்ரோ ரயில் சேவையை விரிவாக்கப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி மாதவரம்-சிறுசேரி சிப்காட், மாதவரம்-சோழிங்கநல்லூர், கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி என 119 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடத்தில் ரயில் நிலையங்கள் அமைய உள்ளன.

முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் காணொலி காட்சி மூலமாக சென்னையில் மினி பேருந்து சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் எல்லையில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி வழங்கினார். ராணுவ வீரர்களின் குடும்பத்தாரிடம் 20 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

மினி பஸ் எங்கு செல்லும்
ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் - மடிப்பாக்கம் இடையே 2 பேருந்துகள் நாள்தோறும் 14+14 என 28 நடைகள் இயக்கப்படும். ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் - போரூர் இடையே 2 பேருந்துகள் நாள்தோறும் 14+14 என 28 நடைகள் இயக்கப்படும். விமான நிலையம் - குன்றத்தூர் இடையே 2 பேருந்துகள் நாள்தோறும் 10+10 என 20 நடைகள் இயக்கப்படும். திருவொற்றியூர் - மணலி இடையே 2 பேருந்துகள் நாள்தோறும் 12+12 என 24 நடைகள் இயக்கப்படும். கோயம்பேடு - மதுரவாயல் ஏரிக்கரை இடையே 2 பேருந்துகள் நாள்தோறும் 12+12 என 24 நடைகள் இயக்கப்படும். கோயம்பேடு - நொளம்பூர் சக்தி நகர் இடையே 2 பேருந்துகள் நாள்தோறும் 12+12 என 24 நடைகள் இயக்கப்படும்.
ஏற்கனவே மெட்ரோ ரயில் பயணிகள் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று வருவதற்காக எலெக்ட்ரிக் கைப், சைக்கிள், ஷேர் ஆட்டோ, வாடகை கார் ஆகியன ரூ.10 கட்டணத்தில் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்!












Click it and Unblock the Notifications