Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொரோனா 3வது அலை தொடங்கியுள்ளது.. மக்களே உஷார்...! எச்சரிக்கும் மா.சுப்பிரமணியன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை தொடங்கியுள்ளதாகவும், கொரோனா பாதிப்பு சுனாமி போல பாதிக்கும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

Recommended Video

    தற்காலிக சிகிச்சை மையங்கள் ரெடி பண்ணுங்க.. மாநிலங்களுக்கு மத்திய அரசு அலர்ட்!

    கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவின் வுகான் மாநிலத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் 2020ஆம் ஆண்டில் இந்தியாவிலும் பரவியது. சுமார் இரு ஆண்டுகள் கொரோனாவின் கோரதாண்டவத்திற்கு ஏராளமான மக்கள் பலியான நிலையில், இந்தியாவின் வளர்ச்சி மற்றும் பொருளாதாரம் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளானது.

    சுமார் 8 மாதங்களுக்கு மேலாக விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக ஏராளமானோர் வேலை இழந்து கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாயினர். இந்நிலையில் மூன்றாவது அலை பிப்ரவரி மாத இறுதியில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தின் கொரோனா பாதிப்பு

    தமிழகத்தின் கொரோனா பாதிப்பு

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சென்னையிலும் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. இதையடுத்து மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டமானது தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னையில் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை தொடங்கியுள்ளதாகவும் , கொரோனாவின் பாதிப்பு சுனாமி போல அதிகரிக்கும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது என கூறினார்.

    அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    தமிழகத்தில் 17 வது கட்டமாக இன்று மெகா தடுப்பூசி முகாம் சுமார் 50 ஆயிரம் இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சென்னையில் மிக தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் மா சுப்பிரமணியன் தமிழகத்தில் சென்னை செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கூடிக்கொண்டே இருக்கிறது எனவும், காவல்துறை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் என தெரிவித்தார்.

    கொரோனா 3வது அலை

    கொரோனா 3வது அலை

    தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், மூன்றாவது அலை துவங்கியுள்ளது என்றும், டெல்டாவும் ஓமைக்ரானும் சேர்ந்து தற்போது மூன்றாவது அலையாக சுனாமி அலை போல பரவி வருகிறது எனவும், எனவே தொடர்ந்து மக்கள் ஒத்துழைப்பு என்பது தேவை வெளியில் செல்லும் மக்கள் முககவசம் அணிந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

    மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி

    மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி

    சென்னையில் நாளை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகளுக்கு நாளை தடுப்பூசி போடப்படவுள்ளது எனவும், இதனை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கவுள்ளார் எனக் கூறிய அமைச்சர், இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் 15 வயதை கடந்த மாணவ மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் எனவும், 60 வயது கடந்தவர்கள் மற்றும் முன் களபணியாளர்களுக்கு வரும் 10ம் தேதியில் இருந்து பூஸ்டர் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், 2 தடுப்பூசி செலுத்தி 9 மாத காலம் நிறைவடைந்தவர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட இருக்கிறது என கூறினார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+