என்னுடைய அருமை தங்கை கனிமொழி வெற்றி பெற்றுவிட்டார்! சென்னை சங்கமம் விழாவில் ஸ்டாலின் நெகிழ்ச்சி!
சென்னை: ''சென்னை சங்கமம் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து அதில் வெற்றி பெற்றிருக்கக்கூடிய என்னுடைய அருமை தங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி'' என்று சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா தொடக்க விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியிருக்கிறார்.
சென்னை சங்கமம் -நம்ம ஊரு திருவிழாவில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் எப்படி தனக்கு பொழுதுபோனது என்றே தெரியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது;

அருமை தங்கை
சென்னை சங்கமம் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து அதில் வெற்றி பெற்றிருக்கக் கூடியவர் என்னுடைய அருமை தங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி. ஒரு திருவிழாவில் எப்படி எல்லோரும் மகிழ்ச்சியாகவும், குதூகல மனநிலையோடு இருப்பார்களோ அப்படித்தான் நம்முடைய நம்ம ஊரு திருவிழாவிலும் நாம் எல்லோரும் கலந்துகொண்டு இன்றைக்கு மகிழ்ச்சியாக இருந்து கொண்டிருக்கிறோம்.

பொழுது போனது தெரியவில்லை
தொடர்ந்து சட்டமன்றம், அரசு நிகழ்ச்சிகள், ஆய்வுகள், பல்வேறு நிகழ்ச்சிகள் என்று தொடர்ந்து பணிகள் இருந்தாலும், இந்த கலை நிகழ்ச்சியை பார்க்க வேண்டுமென்ற ஆவலோடு நான் இங்கு வந்து பார்த்து இருக்கிறேன். வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால், கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் எப்படிபொழுதுபோனது என்று எனக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் அப்படித்தான் இருந்திருக்கும்.

சம்மட்டியாய்
திராவிட இயக்கம் தான் ஒரு சமுதாயத்தின் ஒரு தரப்பினருக்கான சாமரவீச்சாய் அல்ல... சாதிகளின் பெயரால், சமயங்களின் பெயரால் சமத்துவத்துக்கு சமாதி கட்ட நினைத்த போக்குக்கு எதிரான சம்மட்டியாய்... மூடப்பழக்கங்களுக்கு எதிரான முரசொலியாய் கலைகளை மாற்றியது.
திராவிட இயக்கம் தான் கலை வடிவங்கள் மூலமாக சாமானிய மக்கள் வாழ்க்கையில் அனுபவித்த வலியைப் பேசியது. திராவிட இயக்கம் தான் சாமானிய மக்களின் மொழியில் பேசியது. திராவிட இயக்கம் கலைகளை வளர்த்தது, கலைகளால் வளர்ந்தது.

''கலைஞர்'' வழியில்
நாடகம், திரைப்படங்கள், கிராமியக் கலைகள் அனைத்தையும் பயன்படுத்தி, மக்களிடையே பரப்புரை செய்தோம். கலைகளின் வளர்ச்சிக்கும், கலைஞர்கள் வாழ்வில் மலர்ச்சிக்கும் கண்ணும் கருத்துமாய் கணக்கற்ற திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய அரசு. இது கலைஞர் வழி நடக்கக்கூடிய அரசு. அதனால்தான், இது கலைஞர்களுக்கான அரசாக விளங்கிக் கொண்டிருக்கிறது.

மக்கள் தனித்தனியாக
இந்த விழாவில் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் ஒவ்வொரு கலைஞருக்கும் இதுவரை வழங்கப்பட்ட ஒருநாள் மதிப்பூதியத்தை 2000 ரூபாயிலிருந்து 5000 ரூபாயாக உயர்த்தி வழங்க இருக்கிறோம். பொதுவாகவே மக்கள் தனித்தனித் தீவுகளாக தங்களை இப்போது மாற்றிக் கொள்கிறார்கள். இந்த மனநிலை மாற வேண்டும். உண்மையான பொழுதுபோக்கு என்பது நம்முடைய கலைகள்தான். அந்தக் கலைகள் பொழுதுபோக்காக மட்டுமல்லாமல், நம் மனதைப் பண்படுத்துவதாகவும் அது அமைந்திருக்கிறது.
-
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
நம்பர் 1 முதல்வர் யார்? டாப் 5 லிஸ்ட்டில் யார் யார்? 1952 ராஜாஜி முதல் 2021 ஸ்டாலின் வரை! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை












Click it and Unblock the Notifications