நாளை நீட் தேர்வு எழுதப் போகும் மாணவர்களே! நீங்கள் செய்ய வேண்டியவை! செய்ய கூடாதவை! முழு தகவல் இதோ!
சென்னை : இந்தியா முழுவதும் 2022ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு நாளை நடைபெற இருக்கும் நிலையில், முறைகேடுகளை தடுக்கும் பொருட்டு தேசிய தேர்வு முகமை மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும், வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. அவை என்னென்ன என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்..
நேசனல் டெஸ்டிங் ஏஜென்சி எனப்படும் தேசிய தேர்வு முகமை எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளங்கலை மருத்துவப்படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை ஜூலை 17ஆம் தேதியான ஞாயிற்றுக்கிழமை நடத்த உள்ளது.
இதற்கான அனுமதி அட்டைகள் neet.nta.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியுடன் இணையதளத்தில் லாகின் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேர்வுக்கான வழிகாட்டுதல்
இந்நிலையில் நாளை நடத்தப்படும் தேர்வுக்கான வழிகாட்டுதல்களை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. மதியம் 1.30 மணிக்குள் மாணவர்கள் தங்கள் தேர்வு மையங்களுக்குள் வந்து விட வேண்டும் என்றும், அதனின் மாணவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என NTA அறிவுறுத்தியுள்ளது. நாளை நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ட்ரெஸ் கோட் எனப்படும் ஆடை கட்டுப்பாடும் என்டிஏ சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

கடுமையான சோதனை
நாடு முழுவதும் சுமார் 18 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் தேர்வுக்காக பெறப்பட்டுள்ள நிலையில், அதில் 90% மாணவர்கள் மேற்பட்டோர் நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்துள்ளதாகவும், கூறப்பட்டுள்ளது. தேர்வர்கள் தேர்வுக்கு ஒரு மணி நேரம் முன்னதாக அதாவது மதியம் 12:30 மணிக்கு வந்துவிட வேண்டும். அனைவரும் கடுமையான சோதனைகளுக்குப் பிறகே தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்படுவர். பெண் தேர்வர்கள் , பெண் பணியாளர்களால் மூடப்பட்ட அறைகளுக்குள் சோதனை செய்யப்படுவர். தமிழகத்தில் இருந்து மட்டும் சுமார் 1 லட்சத்து 42 பேர் தேர்வெழுதவுள்ளன.

ஆடைக் கட்டுப்பாடுகள்
1. நீண்ட கைகளுடன் (புல் ஹேண்ட்) கூடிய லேசான ஆடைகள் அணிந்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வெழுத அனுமதியில்லை.
2. குறைந்த குதிகால் (ஹீல்ஸ்0 கொண்ட செருப்புகள் மற்றும் செருப்புகள் அனுமதிக்கப்படும், ஹூக்களுக்கு அனுமதியில்லை.
3. பர்சுகள், கண்ணாடிகள், கைப்பைகள், பெல்ட்கள், தொப்பிகள் போன்ற பொருட்கள் தடைசெய்யப்பட்டுள்ளன.
4. கைக்கடிகாரம், கைக்கடிகாரம், வளையல், கேமரா, ஆபரணங்கள் மற்றும் உலோகப் பொருட்களும் தடைசெய்யப்பட்டுள்ளன.

தேர்வு தேதி மற்றும் நேரம்
நீட்தேர்வு (NEET UG 2022) ஜூலை 17 அன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. தேர்வு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5:20 மணி வரை நடைபெறும்.

மாணவர்கள் எடுத்துச் செல்ல வேண்டியவை
NEET UG 2022 அட்மிட் கார்டுடன், விண்ணப்பதாரர்கள் மைய விவரங்கள், சுய அறிவிப்பு அல்லது உறுதிமொழி, தண்ணீர் பாட்டில், அஞ்சலட்டை (4'X6') அளவு புகைப்படம், சானிடைசர் (50 மில்லி), புகைப்பட அடையாளச் சான்று, என்95 மாஸ்க் ஆகியவற்றை எடுத்துச் செல்லலாம்

எடுத்துச் செல்லக்கூடாதவை
மின்னணு சாதனங்கள், மொபைல் போன்கள் மற்றும் பிற தடை செய்யப்பட்ட உட்பட எந்தவொரு தனிப்பட்ட உடமைகளையும் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

கோவிட்-19 ஆலோசனை
விண்ணப்பதாரர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் மற்றும் மையத்தில் வழங்கப்படும் N-95 முகமூடிகளைப் பயன்படுத்த வேண்டும். சானிடைசர்கள் உபயோகித்துக் கொள்ளலாம். உடல் வெப்பநிலை அதிகமிருந்தால் தனி அறைகளில் தேர்வெழுதலாம்
-
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
தங்கம் விலை இன்னும் 30 சதவீதம் சரிய போகுது.. இன்ப அதிர்ச்சி தந்த நகை வியாபாரிகள் சங்க தலைவர் -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
Gold Price Fall: ஈரான் போருக்கு மத்தியில்! தங்கம் விலை குறைய 5 முக்கிய காரணங்கள் என்னென்ன தெரியுமா? -
சென்னையில் இப்தார் நோன்பில் திடீர் திருப்பம்: தேஜ கூட்டணி தலைவர்கள் செய்த "அந்த" காரியம்! திமுக குஷி -
சென்னை விமான நிலையத்தில் போக்குவரத்து மாற்றம்.. ஸ்தம்பித்த ஜிஎஸ்டி சாலை.. வாகன ஓட்டிகள் கவனம் -
இந்தியாவின் பெரிய ரிங் ரோட்டில்.. வருது ராட்சச ரயில் பாதை.. தமிழக அரசு கிரீன் சிக்னல்! தரமான முடிவு -
15 வருட ஏக்கம்! சென்னை வேளாங்கண்ணி இடையே நேரடி ரயில் சேவை! பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி தந்த ரயில்வே -
சென்னை தேர்தல் களத்தில் பிரியாணி கிடையாது? செலவினப் பட்டியலில் விடுபட்டதால் குழப்பம்! -
தண்ணீர் பாட்டில் 35, டிபன் 50, சென்னை வேட்பாளர்கள் எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு செலவு செய்யலாம் -
முடங்கிய பணிகள்.. கிளாம்பாக்கம் மெட்ரோவிற்கு ‘பச்சைக்கொடி’ காட்டாத மத்திய அரசு.. எல்லாம் போச்சு -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு












Click it and Unblock the Notifications