நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனத்தில் 300 பணியிடங்கள்.. இந்தியில் பயிற்சி.. வெங்கடேசன் எதிர்ப்பு
சென்னை: நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனம் 300 நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கு நடைபெறும் தேர்விற்கான பயிற்சி வகுப்புகளை இந்தியில் மட்டுமே நடத்தி வருவது கண்டனத்திற்குரியது என்றும் தேர்வுக்கு முன்பாக, தமிழ்நாட்டினருக்கு தனிப்பயிற்சி தேவை என்றும் மதுரை எம்பி சு.வெங்கடேசன் வலியுறுத்தி உள்ளார்.
தமிழக தேர்வர்களுக்கு இந்தியில் பயிற்சியா? என்ற பெயரில் நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவன தலைவருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது :
பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனமான நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனம் 300 நிர்வாக அலுவலர் (பொது) பணியிடங்களை நிரப்பவுள்ளது. இதற்கான அறிவிக்கையை ஆகஸ்டு 24, 2021 அன்று வெளியிட்டது. இரண்டு கட்டங்களாக இந்தத் தேர்வு நடைபெறும். முதல் கட்டத்தேர்வு அக்டோபர் 16, 2021 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆன்லைன்
விண்ணப்பித்துள்ள ஓ.பி.சி. எஸ்.சி., எஸ்.டி தேர்வர்களுக்கு தேர்வுக்கு முன்பாக பயிற்சி தரப்படும். முக்கியமான மையங்களில் இந்த வகுப்புகள் நடைபெறும். இந்த முறை ஆன்லைனில் இதற்கான ஏற்பாடுகள் நடந்துள்ளன. மிகவும் ஆர்வத்தோடு தமிழகத்திலிருந்து விண்ணப்பித்திருந்த தேர்வர்கள் இதில் பங்கேற்றனர்.

தமிழக மாணவர்கள்
முதல் நாளிலேயே இவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இந்தி வழியில்தான் பயிற்சி தரத் துவங்கினர். அக்டோபர் 4 ஆம் தேதி துவங்கிய இந்தப் பயிற்சி தற்போது நடைபெற்று வருகிறது. தொடர்ந்து இந்தியில்தான். வகுப்புகள் நடக்கின்றன. இது விண்ணப்பித்துள்ள ஆயிரக்கணக்கான தமிழக மாணவர்களுக்கு எந்தவித பலனையும் தருவதாக இல்லை. இதில் கொடுமை என்னவென்றால், ஆங்கில மொழித்தாளுக்கான பயிற்சி வகுப்பையும் அவர்கள் இந்தியில்தான் நடத்தியிருக்கிறார்கள்.

வெங்கடேசன் கடிதம்
ஆகவே, தேர்வுக்கு முன்பாக, ஒரு குறுகிய காலப் பயிற்சி ஒன்றை தமிழ்நாட்டிலிருந்து விண்ணப்பித்துள்ள தேர்வர்களுக்கு ஏற்பாடு செய்திட வேண்டும். அதோடு, தேர்வர்களுக்குப் புரியும் மொழியில் நடத்திட வேண்டும் என்றும், வரும் காலங்களில் இத்தகைய நிகழ்வுகள் நேராவண்ணம் உறுதி செய்திட வேண்டும் என்று அக்கடிதத்தில் கோரியுள்ளேன்" இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

தமிழில் படிவங்கள்
மதுரை எம்பி சு வெங்கடேசன் ஏற்கனவே இந்தி திணிப்புக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். அதேபோல் தமிழகத்தின் பல்வேறு நலன் சார்ந்த உரிமைகளுக்கு கடிதம் எழுதி வருகிறார். அண்மையில் அஞ்சல் நிலையங்களில் தமிழில் படிவங்கள் இருக்க வேண்டும் என்று கடிதம் எழுதினார். அதற்கு செவிசாய்த்த மத்திய அரசு அதை அமல்படுத்த உத்தரவிட்டது. இரண்டு வாரங்களில் அனைத்து அஞ்சலக படிவங்களிலும் தமிழ் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்கள் இயக்கம்
அண்மையில் தெற்கு ரயில்வேக்கு முன்பதிவு இல்லாத ரயில்களை இயக்க வேண்டும் என்று மதுரை எம்பி வெங்கடேசன் கடிதம் எழுதினார். இதையடுத்து மதுரை ராமேசுவரம், திருச்சி திண்டுக்கல், கோவை மன்னார்குடி உள்ளிட்ட வழித்தடங்களில் முன்பதிவு இல்லாத பொதுப்பெட்டிகளைக் கொண்ட விரைவு ரயில்களை 7 ஆம் தேதி முதல் இயக்க உத்தரவிட்டது. இதற்காக தெற்கு ரயில்வேக்கு நன்றி தெரிவித்துள்ள வெங்கடேசன், மேலும் சில ரயில்களை இயக்க கோரிக்கை வைத்துள்ளார்.
-
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம்












Click it and Unblock the Notifications