நடிகர் விவேக் மரணத்தில் மர்மம் இருப்பதாக புகார்.. விசாரணைக்கு ஏற்றது தேசிய மனித உரிமைகள் ஆணையம்!
சென்னை: சின்ன கலைவாணர் மற்றும் ஜனங்களின் கலைஞன் என அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்ட நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் மாதம் 17 ம் தேதி மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார்.
தனது நகைச்சுவையால் மக்களை சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் வைத்த நடிகர் விவேக்கின் திடீர் மரணம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கியது.

கொரோனாவை தடுக்கும் ஒரே பேராயுதமான தடுப்பூசி குறித்து மக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த நடிகர் விவேக், மரணம் அடைவதற்கு இரண்டு நாட்கள் முன்புதான் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டு அந்த புகைப்படத்தையும் வெளியிட்டு மக்களிடம் விழுப்புணர்வு ஏற்படுத்தினார். தடுப்பூசி போட்டதால்தான் விவேக் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டார் என்று செய்திகள் வேகமாக பரவியது.
ஆனால் இந்த செய்திகள் எல்லாம் தவறானது என்று கூறிய தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், நடிகர் விவேக்கின் மரணத்துக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பு இல்லை என்றும் தடுப்பூசி தொடர்பாக வதந்தி பரப்ப கூடாது என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். சுகாதார நிபுணர்களும் இந்த கருத்தையே கூறினார்கள்.
இந்த நிலையில் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தியதால்தான் நடிகர் விவேக் மரணமடைந்துள்ளார். அவரது இறப்பில் மர்மம் இருக்கிறது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று தேசிய மனித உரிமை ஆணையத்தில் விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் புகார் மனு அளித்தார். இந்த புகார் மனுவை ஏற்றுக் கொண்ட தேசிய மனித உரிமை ஆணையம் அதனை விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications