Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கல்வி நிறுவனங்களில் சாதி பெயர் வேண்டாம்.. தமிழக அரசுக்கு நீதிபதி சந்துரு குழு பரிந்துரை

Subscribe to Oneindia Tamil

சென்னை: கல்வி நிறுவனங்களில் சாதிய வன்முறைகளை தடுக்க ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு குழு தமிழக அரசுக்கு பரிந்துரைகளை வழங்கியுள்ளது. இதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆதி திராவிட நலத்துறை உள்பட எந்த சாதிய அடையாளமும் இருக்க கூடாது என்பது உள்ளிட்ட பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளது.

பள்ளி, கல்லூரிகளில் சாதிய வன்முறைகள் நடப்பதை தடுப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு குழு தமிழக அரசுக்கு பரிந்துரைகளை வழங்கியுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

Education School Tamil Nadu Caste

அரசு பள்ளிகளின் பெயர்களில் எந்த சாதிய அடையாளங்களும் இருக்க கூடாது. ஆதி திராவிட நலத்துறை உள்பட எந்த சாதி அடையாளமும் இருக்க கூடாது. இதேபோல் தனியார் பள்ளிகளில் உள்ள சாதி பெயர்களை நீக்க வேண்டும். சாதி அடையாளங்கள் இருக்க கூடாது என்ற உறுதிமொழி பெற்ற பின்னரே புதிய பள்ளி தொடங்குவதற்கு அனுமதி கொடுக்க வேண்டும்.

குறிப்பிட்ட சாதி ஆதிக்கமாக உள்ள அந்த பகுதிகளில் இருக்கும் பள்ளிக்கூடங்களில் அதே சமூகத்தினரை சேர்ந்தவரை தலைமையாசிரியராக நியமனம் செய்யக் கூடாது. ஆசிரியர்களை தேர்வு செய்யும் போது சமூக நீதி சார்ந்த அவர்களின் நிலைப்பாட்டினை தெரிந்துகொள்ள வேண்டும்.

கைகளில் வண்ணக்கயிறுகள், நெற்றியில் திலகம் போன்றவற்றிற்கு தடை விதிக்க வேண்டும். மாணவர்களின் வருகை பதிவேட்டில் எக்காரணம் கொண்டும் சாதி பெயர் இடம்பெறக்கூடாது. மாணவர்களின் சாதி விவரங்களை ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+