தெற்கில் 3 பக்கம் கடல்.. ஆனால், தீங்கு வடக்கால் தான்.. வாடை நமக்கு ஆகாது.. வைகோ விளாசல்!
சென்னை : தென் மாநிலங்கள் மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்டிருந்தாலும் நமக்கு அதனால் எவ்வித தீங்கும் நேரவில்லை. மாறாக வடக்கு தான் நமக்கு எப்போதும் தீங்கை விளைவிக்கிறது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசியுள்ளார்.
வடக்கில் இருந்து வீசக்கூடிய வாடைக்காற்றும் நமக்கு ஒத்துவராது, வடக்கே உள்ள கலாச்சாரமும் நமக்கு ஒத்து வராது. வடக்கு என்பது எப்போதும் நமக்கு எதிரானது என வைகோ தெரிவித்துள்ளார்.
வரலாற்று திரிபு நூல்கள் மூலம் தமிழ்நாட்டிற்குள் ஊடுருவ முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதனை தடுக்க நமக்கு கூர்மையான கருவி தேவை. அந்த கருவி, முற்போக்கு தலைவர்களின் புத்தகங்கள் தான் என்றும் வைகோ சுட்டிக்காட்டியுள்ளார்.

திசை புத்தக நிலையம்
சென்னை தேனாம்பேட்டையில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி முன்னெடுப்பில் திசை புத்தக நிலையம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் என கருத்தியல் தலைவர்களைக் கண்டடைவதற்கான நூல்கள் திசை புத்தக நிலையத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழாவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டனர்.

திருமுருகன் காந்தி
இந்த புத்தக நிலைய துவக்க நிகழ்ச்சியில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, "ஈழப் போரில் லட்சகணக்கான தமிழர்கள் கடற்கரையில் உயிரிழந்துள்ள நிலையில் அவர்களுக்காக சென்னை மெரினா கடற்கரையில் நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்தியவர் திருமுருகன் காந்தி. இளைஞர்களுக்கு வழிகாட்டக்கூடிய தகுதி திருமுருகனுக்கு உள்ளது.

என்னுடன் வாருங்கள் என்று சொல்ல மாட்டேன்
அரசியலில் ஈடுபாடு உள்ள தமிழக இளைஞர்கள் இங்கு உள்ள திராவிட கட்சிகளில் சேர விருப்பமில்லை எனில் அவர்கள் திருமுருகன் காந்தியை பின்பற்றலாம். அடுத்த 15 ஆண்டுகளில் திருமுருகன் காந்தி இளைஞர்களுக்கு வழிகாட்டக்கூடிய தலைவராக வருவார். என்னைப் பொறுத்தவரையில் இளைஞர்களை எனது கட்சிக்கு வாருங்கள் என்று கூட நான் கூற மாட்டேன், திருமுருகன் காந்தி பின்னால் செல்லுங்கள் என்பேன்.

வடக்கு நமக்கு ஒத்து வராது
தென் மாநிலங்களைப் பொறுத்தவரையில் மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்டுள்ள நிலையில் நமக்கு அதனால் எவ்வித தீங்கும் நேரவில்லை. மாறாக வடக்கு தான் நமக்கு எப்போதும் தீங்கை விளைவிக்கிறது. வடக்கில் இருந்து வீசக்கூடிய வாடைக்காற்றும் நமக்கு ஒத்துவராது, வடக்கே உள்ள கலாச்சாரமும் நமக்கு ஒத்து வராது. வடக்கு என்பது எப்போதும் நமக்கு எதிரானது. கொஞ்ச நாட்களாக சனாதன சக்திகள் ஆட்டம் போடுவதை பார்த்தால், தமிழ்நாட்டில் திராவிட உணர்வு செத்துப்போய் விட்டாதா என மனச்சோர்வு ஏற்படுகிறது.

வரலாற்றுத் திரிபு
வரலாற்று திரிபு நூல்கள் மூலம் தமிழ்நாட்டிற்குள் ஊடுருவ முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதனை தடுக்க நமக்கு கூர்மையான கருவி தேவை. அந்த கருவி, முற்போக்கு தலைவர்களின் புத்தகங்கள் தான். தமிழ்நாட்டின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது. தமிழகத்தின் பிற பகுதிகளிலும் முற்போக்கு தலைவர்கள் கூறிய கருத்துகளை புத்தகங்களாக எடுத்துச் செல்லுங்கள். தமிழ்நாட்டின் விடைகளுக்கு இந்த திசை பதிப்பகம் ஓர் திசையாக இருக்கட்டும்" எனத் தெரிவித்தார்.
-
முடியவே முடியாது.. டெல்லியை எதிர்த்து நிற்கும் அண்ணாமலை! பாஜக பட்டியல் தாமதம்! இது தான் காரணம்! -
"வேட்பாளர் இல்லை வெறும் பூத் ஏஜென்ட் தான்".. பாஜகவுக்கு அண்ணாமலை சொன்ன மெசேஜ்.. மேலிடத்துக்கு அடுத்த ஷாக் -
இது தமிழ்நாடு ப்ரோ.. பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி! கை கொடுக்காத ஷாவின் ’அறுபடை வீடு’ பாலிடிக்ஸ் -
யாரு? எங்க? பாஜகவில் பரபர பஞ்சாயத்து! அதிமுகவால் கடுப்பான டெல்லி! மொடக்குறிச்சியில் அண்ணாமலை போட்டி? -
பாஜகவில் பஞ்சாயத்து.. காங்கிரஸில் கலகம்! என்ன தான் பிரச்சனை! எப்போது வரும் வேட்பாளர் பட்டியல்? -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
ராதாபுரத்தில் தமிழிசை, மயிலாப்பூரில் அண்ணாமலை? பாஜக எடுக்கும் முடிவு.. கமலாலயத்தில் நடந்தது என்ன? -
சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்? -
2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியில்லை? மொடக்குறிச்சியை திணிக்கும் பாஜக மேலிடம்? Annamalai அப்செட் -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
அண்ணாமலை போட்டியிடும் தொகுதி இதுவா? ஈரோட்டில் பாஜக செம ட்விஸ்டு.. மொத்த மொடக்குறிச்சியும் வெயிடிங்











Click it and Unblock the Notifications