இது என்ன எடப்பாடி வீட்டுச் சொத்தா? யார் இவருக்கு அதிகாரம் கொடுத்தது?.. கொந்தளித்த ஓபிஎஸ்
சென்னை: அதிமுக தலைமை அலுவலகம் யாருக்கு சொந்தம்? என் வீட்டில் நானே திருடுவேனா என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுக பொதுக் குழு கூட்டத்திற்கு எதிராக ஓபிஎஸ் போட்ட வழக்கில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஓபிஎஸ் பக்கம் தாவி வருகிறார்கள். இதனால் அவருக்கான ஆதரவு பெருகிக் கொண்டே இருக்கிறது.
இந்த நிலையில் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் ராமமூர்த்தி, மதுரை மாநகர மாவட்டச் செயலாளர் கோபால கிருஷ்ணன், மதுரை புறநகர் தெற்கு மாவட்ட இணைச் செயலாளர் ரங்கராஜ் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் தேனி பெரியகுளத்தில் உள்ள ஓபிஎஸ்ஸை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

ஆதரவாளர்கள்
இதையடுத்து ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய ஓபிஎஸ், தமிழகத்தில் 30 ஆண்டுகாலம் ஆட்சி அமைத்த ஒரே கட்சி அதிமுக. முன்னாள் முசல்வர் எம்ஜிஆர் உருவாக்கி தொண்டர்கள் இயக்கமாக மாற்றினார். கடந்த ஜூன் 23 இல் நடந்த கவுரமான பொதுக் குழுவில் சிவி சண்முகம் செய்தது கேலி கூத்தான செயல் ஆகும்.

பொதுக் குழு கூட்டம்
ஜூன் 23 ம் தேதி 10 மணிக்கு பொதுக் குழு கூட்டத்தை வைத்துக் கொண்டு என் வீட்டை காலை 8 மணிக்கு எடப்பாடி பழனிசாமி கடந்து சென்றார். என்னை பொதுக் குழுவிற்கு வராமல் தடுக்கும் நோக்கத்தில் அவரது ஆதரவாளர்கள் வேண்டுமென்றே போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தினர்.

200 இருக்கைகள்
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு கடந்த ஜூலை 11 ஆம் தேதி நான் சென்ற போது 200 இருக்கைகளை போட்டு அமர்ந்து தலைமை கழகத்தை பூட்டி வைத்திருக்கிறார்கள். தலைமை கழகத்தை பூட்டுவதற்கு யார் இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது? இது யார் வீட்டு சொத்து, எடப்பாடி பழனிசாமியின் அப்பா வீட்டு சொத்தா, ஜானகி அம்மாள் தன்னுடைய சொத்தை கழகத்திற்காக எழுதி கொடுத்தார்.

பொதுக் குழு கூட்டம்
பொதுக் குழு அங்கு நடக்கும் போது அங்கு போகாமல் இவர்களுக்கு இங்கு என்ன வேலை, நான் திருடிச் சென்றுவிட்டேன் என சொல்கிறார்கள். எதற்கு நான் திருட போகிறேன், என் வீட்டில் நான் திருடுவேனா? நான் பேச ஆரம்பித்தால் யாரும் தாங்க மாட்டார்கள். அவ்வளவு சரக்கு இருக்கு. இதில் என்னை பதவி ஆசை பிடித்தவன் என்கிறார்கள் என ஓபிஎஸ் பொரிந்து தள்ளிவிட்டார்.

கடுமையாக விமர்சித்த ஓபிஎஸ்
இத்தனை நாட்களாக எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ்ஸை கடுமையாக விமர்சித்த போதிலும் ஓபிஎஸ் அமைதி காத்து கண்ணியத்துடன் பேசி வந்தார். ஆனால் நேற்று மதுரையில் நடந்த கூட்டத்தில் எடப்பாடி தரப்பினரை கோபத்துடன் பேசினார். அவர் பேசிய ஒவ்வொரு பேச்சுக்கும் சுற்றியிருந்த ஆதரவாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications