அப்பாடா இப்போதான் நிம்மதியா இருக்கு! சரி செய்யப்பட்ட இன்ஸ்டாகிராம்! ஹேப்பியாகி ரீல்ஸ் போடும் யூசர்ஸ்
சென்னை : நேற்று உலகின் பல பகுதிகளிலும் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளம் திடீரென முடங்கிய நிலையில் பயனாளர்கள் கடும் அவதி அடைந்தனர். இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் மீண்டும் சரி செய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
உலக அளவில் மிகப் பிரபலமான சமூக வலைத்தளங்களில் ஒன்றாக இன்ஸ்டாகிராம் இருக்கிறது. நடிகர்கள் நடிகைகள், விளையாட்டு வீரர்கள் தொடங்கி கல்லூரி மாணவர்கள் வரை பில்லியன் கணக்கானோர் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் வைத்திருக்கின்றனர்.
பேஸ்புக் தளத்திற்கு போட்டியாக துவக்கப்பட்டாலும் பின்னர் அதன் தாய் நிறுவனமான மெட்டா இன்ஸ்டாகிராம் வலைதளத்தை வாங்கியது. வாட்ஸ் அப்பும் மெட்டா நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராம் முடக்கம்
குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வசதி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு அதன் பயனாளர்களின் எண்ணிக்கை மேலும் பல மில்லியன்கள் அதிகரித்துள்ளது. டிக் டாக் தடை செய்யப்பட்ட பிறகு தங்கள் திறமைகளை வெளிக்காட்ட பலரும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வசதியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தான் நேற்று இரவு திடீரென உலகின் பல்வேறு பகுதிகளிலும் இன்ஸ்டாகிராம் முடங்கியது.

பயனாளர்கள் அவதி
பலரது அக்கவுண்டுகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக செய்தியும் வந்தது. இதனால் குழம்பிப்போன பயனாளர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் ட்விட்டர் பேஸ்புக் உள்ளிட்ட வலைதளங்களில் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வாட்சப் முடங்கிய நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமும் முடங்கியதற்கான காரணம் புரியாமல் தவித்தனர்.

களமிறங்கிய மெட்டா
இந்த நிலையில் எதிர்பாராத விதமாக பலரது அக்கவுண்டுகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளதாகவும் இந்த பிரச்சினையை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக இன்ஸ்டாகிராம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் நள்ளிரவில் இன்ஸ்டாகிராம் மின் பொறியாளர்கள் குறிப்பிட்ட அந்த 'பக்'கை சரி செய்தனர்.

மீண்ட இன்ஸ்டாகிராம்
இதை அடுத்து இன்ஸ்டாகிராம் மீண்டும் வழக்கம்போல் செயல்பட தொடங்கியது சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட கணக்குகளும் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்ததால் பயனாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரத்தில் வைரஸ் பாதிப்பா அல்லது ஹேக்கர்களின் கைவரிசையா என்பது குறித்து விளக்கம் அளிக்க இன்ஸ்டாகிராம் மறுத்துவிட்டது. எப்படி எனும் மீண்டும் ரீல்ஸ் செய்ய தயாராகி விட்டனர் பயனாளர்கள்.
-
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
சென்னையில் 6 சிட்டிங் திமுக எம்எல்ஏக்களுக்கு ‘கல்தா’.. அண்ணா நகர் முதல் வில்லிவாக்கம் வரை.. லிஸ்ட் -
எம்.எல்.ஏ பதவியா? மேயர் நாற்காலியா? ஆட்சிக்கு வந்ததுமே ஸ்டாலினுக்கு ‘செக்’ வைத்த ஜெயலலிதா -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
Vijay: வேணும்னே பண்றாங்க.. 10 குற்றச்சாட்டுகளுடன் தலைமை செயலகத்துக்கு நேரில் போன விஜய்! -
அடுத்த ரவுண்டு ஆரம்பம்.. வெயிலுக்கு பிரேக் தரும் மழை.. 2 ஆம் தேதி வரை கொளுத்த போகுது! வானிலை மையம் -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. மீண்டும் தமிழகத்தில் வெளுக்க போகும் மழை.. தென் மாவட்டங்களுக்கு அலர்ட்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி












Click it and Unblock the Notifications