2 நாட்களுக்கு பின் மீண்டும் அதிகரித்த கொரோனா.. தமிழ்நாட்டில் உயர்ந்த கேஸ்கள்.. இன்றைய நிலவரம்!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 23,888 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் 1,61,171 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.
தமிழ்நாட்டில் இன்று 29 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். 37,038 பேர் இதுவரை கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.
தமிழ்நாட்டில் இன்று 15,036 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து உள்ளனர்.இதுவரை தமிழ்நாட்டில் 29,87,254 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டனர்.

தமிழ்நாடு கொரோனா
தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா கேஸ்கள் குறைந்த நிலையில் மீண்டும் கொரோனா கேஸ்கள் உயர்ந்துள்ளது. இரண்டு நாட்களாக 500 என்ற அளவில் கேஸ்கள் குறைந்து வந்தது. இந்த நிலையில் நேற்றை விட இன்று கிட்டத்தட்ட 400 கேஸ்கள் கூடுதலாக பதிவாகி உள்ளது.
- 17 ஜனவரி: 23,443
- 16 ஜனவரி: 23,975
- 15 ஜனவரி: 23,989
- 14 ஜனவரி: 23,459
- 13 ஜனவரி: 20,911
- 12 ஜனவரி: 17,934
- 11 ஜனவரி: 15,379
- 10 ஜனவரி: 13,990
- 09 ஜனவரி: 12,895
- 08 ஜனவரி: 10,978
- 07 ஜனவரி: 8,981

சோதனை
இன்று தமிழ்நாட்டில் கேஸ்கள் உயர்ந்துள்ளதால், இன்னும் நாம் உச்சத்தை கடக்கவில்லை என்பது உறுதியாகி உள்ளது. இன்று தமிழ்நாட்டில் 1,41,562 மாதிரிகள் கொரோனா சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது. தமிழ்நாட்டில் இதுவரை 5,98,30,285 பேருக்கு கொரோனா சோதனைகள் செய்யப்பட்டு இருக்கிறது. சோதனைகள் பெரிய அளவில் உயர்த்தப்படவில்லை என்றாலும் தமிழ்நாட்டில் கேஸ்கள் உயர்ந்துள்ளது. இதுவரை 27,89,045 பேர் தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்து உள்ளனர்.

ஓமிக்ரான் கேஸ்கள்
தமிழ்நாட்டில் ஓமிக்ரான் கேஸ்கள் புதிதாக உயரவில்லை. சென்னையில் அதிகமாக 144 பேருக்கு ஓமிக்ரான் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 241 ஓமிக்ரான் கேஸ்கள் பதிவாகி உள்ளன. இதில் 231 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். செங்கல்பட்டில் 13 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை
சென்னையில் இன்று 8305 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் இன்று 8 பேர் பலியாகி உள்ளனர். சென்னையில் தற்போது 61691 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். கோவையில் இன்று 2228 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. கோவையில் இன்று 5 பேர் பலியாகி உள்ளனர். கோவையில் தற்போது 11594 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். செங்கல்பட்டில் இன்று 2143 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டில் இன்று 3 பேர் பலியாகி உள்ளனர். செங்கல்பட்டில் தற்போது 16985 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications