சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

2 நாட்களுக்கு பின் மீண்டும் அதிகரித்த கொரோனா.. தமிழ்நாட்டில் உயர்ந்த கேஸ்கள்.. இன்றைய நிலவரம்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 23,888 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் 1,61,171 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

தமிழ்நாட்டில் இன்று 29 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். 37,038 பேர் இதுவரை கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.

தமிழ்நாட்டில் இன்று 15,036 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து உள்ளனர்.இதுவரை தமிழ்நாட்டில் 29,87,254 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டனர்.

கொரோனா டெஸ்ட்களை உடனே உயர்த்துங்கள்.. முக்கியம்.. மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை உத்தரவு கொரோனா டெஸ்ட்களை உடனே உயர்த்துங்கள்.. முக்கியம்.. மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை உத்தரவு

தமிழ்நாடு கொரோனா

தமிழ்நாடு கொரோனா

தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா கேஸ்கள் குறைந்த நிலையில் மீண்டும் கொரோனா கேஸ்கள் உயர்ந்துள்ளது. இரண்டு நாட்களாக 500 என்ற அளவில் கேஸ்கள் குறைந்து வந்தது. இந்த நிலையில் நேற்றை விட இன்று கிட்டத்தட்ட 400 கேஸ்கள் கூடுதலாக பதிவாகி உள்ளது.

  • 17 ஜனவரி: 23,443
  • 16 ஜனவரி: 23,975
  • 15 ஜனவரி: 23,989
  • 14 ஜனவரி: 23,459
  • 13 ஜனவரி: 20,911
  • 12 ஜனவரி: 17,934
  • 11 ஜனவரி: 15,379
  • 10 ஜனவரி: 13,990
  • 09 ஜனவரி: 12,895
  • 08 ஜனவரி: 10,978
  • 07 ஜனவரி: 8,981
சோதனை

சோதனை

இன்று தமிழ்நாட்டில் கேஸ்கள் உயர்ந்துள்ளதால், இன்னும் நாம் உச்சத்தை கடக்கவில்லை என்பது உறுதியாகி உள்ளது. இன்று தமிழ்நாட்டில் 1,41,562 மாதிரிகள் கொரோனா சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது. தமிழ்நாட்டில் இதுவரை 5,98,30,285 பேருக்கு கொரோனா சோதனைகள் செய்யப்பட்டு இருக்கிறது. சோதனைகள் பெரிய அளவில் உயர்த்தப்படவில்லை என்றாலும் தமிழ்நாட்டில் கேஸ்கள் உயர்ந்துள்ளது. இதுவரை 27,89,045 பேர் தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்து உள்ளனர்.

ஓமிக்ரான் கேஸ்கள்

ஓமிக்ரான் கேஸ்கள்

தமிழ்நாட்டில் ஓமிக்ரான் கேஸ்கள் புதிதாக உயரவில்லை. சென்னையில் அதிகமாக 144 பேருக்கு ஓமிக்ரான் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 241 ஓமிக்ரான் கேஸ்கள் பதிவாகி உள்ளன. இதில் 231 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். செங்கல்பட்டில் 13 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Recommended Video

    Omicrons 20 Symptoms Revealed! How Long They Last | OneIndia Tamil
    சென்னை

    சென்னை

    சென்னையில் இன்று 8305 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் இன்று 8 பேர் பலியாகி உள்ளனர். சென்னையில் தற்போது 61691 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். கோவையில் இன்று 2228 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. கோவையில் இன்று 5 பேர் பலியாகி உள்ளனர். கோவையில் தற்போது 11594 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். செங்கல்பட்டில் இன்று 2143 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டில் இன்று 3 பேர் பலியாகி உள்ளனர். செங்கல்பட்டில் தற்போது 16985 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

    English summary
    Omicron Coronavirus: Tamilnadu cases went up again after the cases went down for two days.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X