பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டவே முடியாது.. சட்டசபையில் முதல்வர் உறுதி
பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவது தொடர்பாக முதல்வர் பதில் அளித்துள்ளார்.
சென்னை: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால், ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட முடியாது என சட்டபேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதிபட தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டபேரவையில் இன்று 2-வது நாளாக பட்ஜெட் தாக்கல் மீதான விவாதம் நடந்து வருகிறது. அப்போது அணைகட்டு தொகுதி திமுக எம்எல்ஏ நந்தகுமார், பாலாறு குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்டுவதை தடுக்க கோரி கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றினை கொண்டு வந்தார்.
அதில் தமிழகத்தில் சுமார் ஒன்றரை கோடி பேருக்கு குடிநீர் ஆதாரமாக இருக்கக்கூடிய பாலாற்றில் ஆந்திர அரசு தடுப்பணை கட்டுவதை தடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

தடுப்பணை
மேலும் பாலாற்று நீரை விவசாயத்திற்கு பயன்படுத்துவதற்கு வசதியாக 5 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணையை கட்ட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

முதல்வர் பதில்
இதற்கு பதில் அளித்து பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, "கடந்த 2006ம் ஆண்டு சித்தூர் மாவட்டத்தில் தடுப்பணை கட்ட ஆந்திரா முயன்றபோதே, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தார்.

கட்ட முடியாது
அதேபோல் ஆந்திர அரசு பாலாற்றில் தடுப்பணை கட்ட கூடாது என்று கூறி தமிழக அரசும் உச்சநீதிமன்ற கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளதால், ஆந்திர அரசு பாலாறு குறுக்கே தடுப்பணையை கட்டவே முடியாது.

சட்ட ரீதியான நடவடிக்கை
மீறினால் அதை தமிழக அரசு சட்ட ரீதியாக தடுத்து நிறுத்தும். பாலாறு நதிநீர் பிரச்சனையை பொறுத்தவரை, தமிழக அரசு மிக உன்னிப்புடனும், கவனத்துடனும், சட்டரீதியாகவும் தொடர்ந்து அணுகி வருகிறது" என்றார்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications