பயணிகளுக்கு குட் நியூஸ்.. சென்னை கோட்ட ரயில் நிலையங்களில்.. பிளாட்பார கட்டணம் ரூ.10 ஆக குறைப்பு!
சென்னை: நாடு முழுவதும் ஒன்றரை ஆண்டுகளாக தாக்கம் ஏற்படுத்தி வரும் கொரோனா தொற்று காரணமாக பொது போக்குவரத்து பல மாதங்கள் முடங்கியது. இதனை தொடர்ந்து சாலை போக்குவரத்து சீரடைந்து அனைத்து மாநிலமும் பஸ்கள் இயக்கி வருகின்றன.
இதேபோல் ரயில் போக்குவரத்தை பொறுத்தவரை எக்ஸ்பிரஸ் ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. கொரோனாவுக்கு முன்னதாக சாதாரண கட்டணத்தில் இயக்கப்பட்டு வந்த ரயில்களும் எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்றப்பட்டு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகின்றன.

நடைமேடை கட்டணம்
இதேபோல் ரயில் நிலையங்ககளிலும் பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. முன்பதிவு செய்த பயணிகள் மட்டுமே ரயில் நிலையங்களுக்குள் அனுமதிக்கபட்டனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மக்கள் அதிக அளவில் ரயில் நிலையங்களில் கூடாமல் இருக்கும் வகையில் நடைமேடை கட்டணம் 10 ரூபாயில் இருந்து 50 ரூபாய் ஆக உயர்த்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மீண்டும் ரூ.10 ஆக குறைப்பு
வெளியூர்களுக்கு பயணம் செய்யும் உறவினர்களை ரயில் நிலையம் உள்ளே சென்று வழியனுப்ப முடியாமல் தவித்து வந்தனர். இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா தாக்கம் மிகவும் குறைந்ததால் சென்னை ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட ரெயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் 50 ரூபாயில் இருந்து மீண்டும் ரூ.10 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

பயணிகள் மிகவும் மகிழ்ச்சி
சென்னை சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட பிரதான ரயில் நிலையங்களிலும், தாம்பரம், கிண்டி, அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட சென்னை கோட்டத்துக்கு உட்பட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும் நடைமேடை கட்டணம் ரூ.10 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக சென்னை ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் பயணிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பொதுமக்கள் கோரிக்கை
இதன்மூலம் பயணிகள் உறவினர்களை இனி எளிதாக ரயில் நிலையத்துக்குள் சென்று வழியனுப்ப வழிவகை ஏற்பட்டுள்ளது. இதேபோல் எக்ஸ்பிரசாக மாற்றப்பட்ட ரயில்களை மீண்டும் சாதாரண ரயில்களாக இயக்கும்படியும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ரயில்வேயின் இந்த அறிவிப்புக்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

சு.வெங்கடேசன் எம்.பி வரவேற்பு
இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர் ''கொரோனா காலத்தில் ரயில்வே நடைமேடை கட்டணம் 50 ரூபாயாக உயர்த்தப்பட்டது. மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும் என ஒன்றிய அமைச்சரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன். அதன்படி மீண்டும் நடைமேடை கட்டணம் 10 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறேன். அதற்கென தனி கவுண்டர் துவக்கப்பட வேண்டும்' என்று கூறியுள்ளார்.
-
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications