தொடங்கியது காசி தமிழ் சங்கமம்.. தமிழகத்தில் இருந்து படையெடுப்பு.. தமிழில் பிரதமர் மோடி வாழ்த்து
சென்னை: காசி தமிழ் சங்கமத்தின் நான்காவது பதிப்பு இன்று (டிசம்பர் 2)ம் தேதி காசியில் தொடங்கியது. டிசம்பர் 15ம் தேதி வரை விழா நடைபெற உள்ளது. தமிழகத்தில் இருந்து ஏராளமானவர்கள் பங்கேற்க உள்ள நிலையில் பிரதமர் மோடி தமிழ் மொழியில் வாழ்த்து தெரிவித்துள்ளார். காசி தமிழ் சங்கமம் இன்று தொடங்கியுள்ள நிலையில், 'ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்ற உணர்வை ஆழப்படுத்தும் இந்த சிறப்பான நிகழ்ச்சிக்கு எனது நல்வாழ்த்துகளை நான் தெரிவித்துக் கொள்கிறேன். என்று பிரதமர் மோடி தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்துக்கும், காசிக்கும் இடையேயான தொடர்பை காட்டும் வகையில் காசி தமிழ் சங்கம நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 4வது பதிப்புக்கான காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி இன்று காசியில் கோலாகலமாக தொடங்கியது. இந்த ஆண்டு 'தமிழ் கற்கலாம்' என்ற முழக்கத்துடன் நடைபெறுகிறது.

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த லோக்சபா தொகுதியான வாரணாசியில் இந்த விழா தொடங்கி உள்ளது. இன்று தொடங்கிய நிகழ்ச்சி டிசம்பர் 15ம் தேதி வரை நடைபெற உள்ளது.
தமிழகத்தில் இருந்து 7 குழுக்கள் காசிக்கு வருகை தந்து காசியின் பெருமையையும், தமிழகத்துடனான தொடர்பையும் அறிந்து கொள்வதுடன், ஆன்மிக அனுபவத்தைப் பெற உள்ளனர். பள்ளிகளில் தமிழ் மொழிமற்றும் கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தவும், மாணவர்களுக்குத் தமிழ் கற்பிக்கவும் தமிழகத்தில் இருந்து 50 ஆசிரியர்கள் காசிக்கு செல்ல உள்ளனர்.
இந்நிலையில் தான் காசி தமிழ் சங்கத்தையொட்டி பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் தமிழ் மொழியில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி, ‛‛காசி தமிழ் சங்கமம் இன்று தொடங்கியுள்ள நிலையில், 'ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்ற உணர்வை ஆழப்படுத்தும் இந்த சிறப்பான நிகழ்ச்சிக்கு எனது நல்வாழ்த்துகளை நான் தெரிவித்துக் கொள்கிறேன். காசியில் மகிழ்ச்சியோடும், பசுமையான நினைவுகளோடும் சங்கமம் நிகழ்ச்சிக்கு வருகை தருகின்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகள்!'' என கூறியுள்ளார்.
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு இரண்டாம் கட்டமாக, தமிழகத்தில் டிசம்பர் 15 முதல் டிசம்பர் 31 வரை சங்கமம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதில் வாரணாசியில் இருந்து 300 மாணவர்கள் பங்கேற்கின்றனர். இந்த பயணத்தில் தமிழ் பண்பாடு, புராதனமான கலாசாரம், நாகரீக தொடர்பு போன்றவற்றை அறிந்து கொள்வதுடன், தமிழ் மொழியை பற்றி அறிந்து கொள்ள இருக்கின்றனர்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications