பழங்குடியினருக்காக பல வருடங்கள் முன்பே போராடிய பாமக.. 'திண்டுக்கல் சம்பவத்தை' நினைவூட்டும் ராமதாஸ்
சென்னை: டிவிட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் எப்போதுமே ஆக்டிவாக இருப்பவர் பாமக நிறுவனர் ராமதாஸ். அரசியல், அன்றாட நிகழ்வுகள் குறித்த அறிக்கைகள், அறிவிப்புகளை அவர் தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிடுவது வழக்கம். அவ்வப்போது தனது குடும்ப புகைப்படங்கள், பழைய நினைவுகளை சமூகவலைதளங்களில் வெளியிட்டு லைக்ஸ்களை அள்ளி வருகிறார்.
தற்போது ஜெய்பீம் திரைப்படம் குறித்த சர்ச்சைகள் பாமகவைச் சுற்றி சுழன்றடித்துக் கொண்டிருக்கும் சூழலில், மலைவாழ் மக்களுக்காக பாமக கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்னார் அதாவது 2000 ஆண்டில் திண்டுக்கல்லில் நடத்திய மிகப்பெரிய போராட்டம் குறித்த நினைவைப் பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில் , பாட்டாளி மக்கள் கட்சி அனைத்து மக்களின் உரிமைகளுக்காகவும் போராடும் கட்சி. பிற கட்சிகளைப் போல வார்த்தைகளில் மட்டும் சொல்லும் கட்சியல்ல. செயலில் காட்டும் கட்சி. அதற்கு ஆயிரமாயிரம் எடுத்துக்காட்டுகளை கூற முடியும். அத்தகைய எடுத்துக்காட்டுகளில் ஒன்று திண்டுக்கல் மாவட்டத்தில் மலைவேடன் எனப்படும் பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக நான் பங்கேற்று நடத்திய போராட்டம் ஆகும் என பதிவிட்டுள்ளார்.
Recommended Video
திண்டுக்கல் மாவட்டத்தில் அதிக அளவில் வாழும் இந்த மக்கள் தங்களுக்கு பழங்குடியினர் சாதி சான்றிதழ் கிடைக்கவில்லை என்று தன்னிடம் புகார் கூறினார்கள் எனவும், அதைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் 12.12.2000 செவ்வாய்க்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் இல்லம் முன் மலைவேடன் சமுதாயத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் உடலில் இலை, செடி, கொடிகளை அணிந்தும், கைகளில் வில், அம்புகளை ஏந்தியும் ஊர்வலமாக வந்தபோது திண்டுக்கல் நகரம் திணறியது என அப்போது வந்த பத்திரிகை செய்திகள் மற்றும் துண்டு பிரசுரத்தையும் வெளியிட்டுள்ளார். இந்த பதிவை தற்போது வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை பகிர்ந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications