சென்னை மக்கள் கவனத்திற்கு... நாளை பல்வேறு பகுதியில் மின்தடை!
சென்னை: சென்னையில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
மாதாந்திர பராமரிப்பு பணிக்காக தமிழ்நாட்டில் மாதந் தோறும் அந்தந்த பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

இந்நிலையில் சென்னையில் நாளை (நவம்பர் 29) பின்வரும் இடங்களில் பராமரிப்புப் பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ளது.
காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படும் என்றும் பராமரிப்பு பணிகள் மாலை 4 மணிக்குள் முடிந்தவுடன் மின்சாரம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மின்தடைக்கு ஏற்ப பொதுமக்கள், வியாபாரிகள், சிறு, குறு தொழில்முனைவோர் தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
செம்பியம், கொடுங்கையூர், முத்தமிழ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து தெருக்களிலும், வியாசர்பாடி, பெரியார் நகர், பெரம்பூர் நெடுஞ்சாலை, திருவிக நகர், பி.பி. சாலை மற்றும் மாதரவரத்தின் ஒரு சில பகுதிகளில் மின் தடை இருக்கும் என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications