பிரேமலதாவுக்கு போன் போட்ட பிரதமர் மோடி.. விஜயகாந்த் உடல்நிலை பற்றி விசாரிப்பு.. குணமடைய பிரார்த்தனை!
சென்னை : தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் உடல்நிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடி, பிரேமலதா விஜயகாந்திடம் தொலைபேசியில் நலம் விசாரித்தார்.
உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் ரத்த சர்க்கரை அளவு வெகுவாக அதிகரித்த நிலையில், அவரது காலில் மூன்று விரல்கள் அகற்றப்பட்டுள்ளன.
இந்நிலையில், பிரேமலதாவை தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி விஜயகாந்த் விரைந்து நலம் பெற்றுத் திரும்ப வேண்டிக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த் உடல்நிலை
உடல்நிலை சரியில்லாததால் கடந்த சில வருடங்களாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் பொதுக்கூட்டங்களிலோ, கட்சிக் கூட்டங்களிலோ பங்கேற்காமல் இருந்து வருகிறார். அவர் சிகிச்சைக்காக பல்வேறு நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டார். இந்நிலையில், சமீபத்தில் விஜயகாந்தின் காலில் வீக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கால் விரல்கள்
விஜயகாந்த்தின் கால் விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லை என்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். இதையடுத்து ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகளவு கூடியிருப்பதால் விஜயகாந்தின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் தவிர்க்க முடியாத காரணத்தால் விஜயகாந்தின் வலது கால்களில் இருந்த 3 விரல்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளதாகவும் தேமுதிக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.

நலமாக இருக்கிறார்
மேலும், மருத்துவர்களின் கண்காணிப்பில் அவர் நலமாக இருக்கிறார். சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் விஜயகாந்த் வீடு திரும்புவார் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும், கட்சித் தொண்டர்கள், அபிமானிகள் முதல் திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் விஜயகாந்த் உடல் நலம் பெற அடுத்தடுத்து தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

விசாரித்த பிரதமர் மோடி
இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலம் குறித்து பிரேமலதா விஜயகாந்த்திடம் பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார். விஜயகாந்த்திற்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சைகள் குறித்தும் பிரதமர் மோடி தொலைபேசியில் பிரேமலதாவிடம் விசாரித்துள்ளார். மேலும் விஜயகாந்த் விரைவில் குணமடைந்து ஆரோக்கியமாக வாழ தாம் பிரார்த்தனை செய்ததாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
-
தொடரும் ஈரான் போர்! கச்சா எண்ணெய் – கேஸ் அபாயம் பற்றி மாநில முதலமைச்சர்களுடன் மோடி தீவிர ஆலோசனை -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர்












Click it and Unblock the Notifications