ஒட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தல் நடத்த தடை நீங்கியது.. வழக்கை வாபஸ் பெற்றார் டாக்டர் கிருஷ்ணசாமி
Recommended Video

சென்னை: ஒட்டப்பிடாரம் சட்டசபை தேர்தல் முடிவுகள் தொடர்பாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தொடர்ந்த வழக்கை அவர் திரும்ப பெற சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து அங்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான தடை நீங்கியது.
கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஒட்டப்பிடாரம் தொகுதியில் திமுக சார்பில் கிருஷ்ணசாமி போட்டியிட்டார். ஆனால் அதிமுக வேட்பாளர் சுந்தரராஜிடம் வெறும் 493 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோற்றார்.

இதனால் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி நடந்துள்ளதால் மறு வாக்கு எண்ணிக்கை கோரி கிருஷ்ணசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இதனிடையே நாடாளுமன்றம் மற்றும் 21 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த நிலையில் அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 3 தொகுதிகளில் வழக்கு நிலுவையில் உள்ளதால் இந்த 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை நடத்த முடியாது என தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்தார்.
இதனால் ஒட்டப்பிடாரத்துக்கு தேர்தல் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. எனினும் எதிர்க்கட்சிகள் இந்த தொகுதிக்கு தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்திருந்தனர். இதனிடையே அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடும் புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற அனுமதி கோரினார். இதையடுத்து கிருஷ்ணசாமியின் கோரிக்கையை ஏற்ற உயர்நீதிமன்றம் அவரது வழக்கை தள்ளுபடி செய்தது.
இதனால் ஒட்டப்பிடாரத்தில் இடைத்தேர்தல் நடத்த இருந்த தடை நீங்கியுள்ளது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications