ராஜராஜ சோழன் இந்துவா? ஜோதியில் ஐக்கியமான ஜெயக்குமார் - என்ன சொல்லி இருக்காரு தெரியுமா?
சென்னை: பேரரசன் ராஜராஜ சோழன் இந்துவாக மாற்றப்பட்டு இருப்பதாக இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்த கருத்துக்கு ஆதரவு எதிர்ப்பு என தொடர்ந்து விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் இதுகுறித்து பேசியுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் 60 வது பிறந்தநாளை முன்னிட்டு சமத்துவம், மக்கள் எழுச்சி, ஒன்று சேர் என்ற தலைப்பில் குறும்பட மற்றும் ஆவணப்பட கலை திருவிழா கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
சென்னையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கலந்துகொண்ட இயக்குநர் வெற்றிமாறன், "திராவிட இயக்கம் தமிழ் சினிமாவை கையில் எடுத்ததன் விளைவுதான் தமிழ்நாடு இன்னும் மதசார்பற்ற மாநிலமாகவும், பல புற சக்திகளின் ஊடுருவலை தடுக்கக்கூடிய பக்குவத்துடன் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

சினிமா
சினிமா என்பது வெகு மக்களை மிக எளிமையாக சென்றடையக்கூடிய கலை வடிவம். சினிமாவை அரசியல் மயமாக்குவது மிக முக்கியமானது. இடைப்பட்ட காலத்தில் இது இல்லாமல் இருந்தது. திராவிட இயக்கம் சினிமாவை கையில் எடுக்கும்போது, இலக்கியத் துறையை சேர்ந்தவர்கள் 'கலை கலைக்காகதான், கலை மக்களுக்கானது இல்லை' என்றார்கள். அழகியல் பற்றி நிறைய பேசினார்கள்.

கலை
கலையில் அழகியல் முக்கியமானதுதான். ஆனால், மக்களிடம் இருந்து விலகி எந்த கலையும் முழுமையடையாது. மக்களுக்காகதான் கலை. மக்களை பிரதிபலிப்பதுதான் கலை. இந்த கலையை இன்று நாம் சரியாக கையாள வேண்டும். இதனை கையாள தவறினால் வெகு சீக்கிரம் நிறைய அடையாளங்கள் பறிக்கப்படும். தொடர்ந்து நம்மிடம் இருந்து அடையாளங்கள் பறித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

ராஜராஜ சோழன்
வள்ளுவருக்கு காவி உடை கொடுப்பது, ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவது இப்படி தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது. இது சினிமாவிலும் நடக்கும். சினிமாவிலும் நிறைய அடையாளங்களை எடுக்கிறார்கள். இந்த அடையாளங்களை நாம் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். நம்முடைய விடுதலைக்காக நாம் போராட வேண்டும் என்றால் நாம் அரசியல் தெளிவுடன் இருக்க வேண்டும்." என்று கூறினார்.

ஜெயக்குமார்
இந்த நிலையில் சென்னை வண்ணாரப்பேட்டையில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கிய நிகழ்வில் கலந்துகொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ராஜராஜ சோழன் இந்து இல்லை என்ற கருத்து பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்த அவர், "யார் எந்த மதம் என்பது குறித்து ஆய்வு செய்து அவர்கள் PhD பட்டம் வேண்டுமானால் பெற்றுக் கொள்ளலாம். அரசியல் வேண்டாம்." என்றார்.












Click it and Unblock the Notifications