ஏடிஎம்களில் பணம் வரவில்லையா? கவலை வேண்டாம்.. வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வைத்த அதிரடி செக்!
சென்னை: ஏ.டி.எம்.மில் பணம் வரவில்லை என்றால் வாடிக்கையாளர்களுக்கு வங்கி இழப்பீடு வழங்க வேண்டும் என்ற இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
பெரும்பாலும் பலர் இப்போது வங்கிக்கு செல்வது இல்லை. எல்லா சேவைகளும் இப்போது 24 மணி நேரமும் ஆன்லைனில் கிடைக்கிறது. கையடக்க மொபைலில் எல்லா வேலைகளும் முடிந்துவிடுகிறது.
பணம் தேவை என்றாலும் அருகில் உள்ள எந்த ஏ.டி.எம் மையத்திற்காவது சென்று எடுக்க முடிகிறது. இந்த சேவைத்தான் வாடிக்கையாளர்கள் விரும்புகிறார்கள். ஏ.டி.எம். களில் பணம் எடுப்பது தற்போது அதிகரித்து வருகிறது.

பணம் எடுத்தாக மெசேஜ்
சில நேரங்களில் நீங்கள் , ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்ட பணம் வராமல் இருக்கலாம், ஆனால் வங்கி கணக்கில் தொகை பிடித்தம் செய்திருப்பதாக குறுஞ்செய்தி வருவது வழக்கமாகும்,. ஆனால் அப்படி. வராத தொகையை, அடுத்த ஓரிரு நாட்களில் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களின் கணக்கிற்கு வங்கிகள் வரவு வைக்க வேண்டும்.

இழப்பீடு தர வேண்டும்
ஆனால், அவ்வாறு நடைபெறுவதில்லை. கூடுதல் அவகாசம் எடுத்துக்கொள்ளப்படுவதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்து வந்தனர். இதனால், ‘ஏ.டி.எம். பரிவர்த்தனை வெற்றியடையாமல், பிடித்தம் செய்யப்பட்ட பணத்தை குறிப்பிட்ட அவகாசத்திற்குள் வரவு வைக்கவில்லையெனில், வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்' என ரிசர்வ் வங்கி அதிரடியாக உத்தரவிட்டு உள்ளது.

ரிசர்வ் வங்கி அதிரடி
இதன்படி ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்ட பணம் வராமல் போன நாளில் இருந்து குறிப்பிட்ட அவகாசத்திற்குள் அந்த பணத்தை வாடிக்கையாளர்களின் கணக்கில் வரவு வைக்கத் தவறினால், தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும், நூறு ரூபாய் இழப்பீடாக வங்கி வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

பணம் அனுப்பலாம்
முன்னதாக ரிசர்வ் வங்கி இந்த ஆண்டு டிசம்பர் முதல் ஆர்.டி.ஜி.எஸ் (ரியல் டைம் மொத்த தீர்வு) அமைப்பு முறையில் 24 மணி நேரமும் (24x7) பணம் அனுப்ப முடியும் என்று அறிவித்தது. இதன்படி நிறுவனங்கள், வணிகத்திற்காக இனி 24 மணி நேரமும் பல லட்சம் ரூபாயை கூட நிமிடத்தில் அனுப்ப முடியும்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications