பான் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு.. ஏப்ரல் 1 முதல் சொத்து, சம்பளத்தில் அந்த வருமான வரி ஜாக்பாட்
சென்னை: புதிய வருமான வரி விதிகள் 2026 (New Income Tax Rules 2026), 60 ஆண்டுகாலப் பழைய சட்ட நடைமுறைகளை எளிமையாக்கி வரும் ஏப்ரல் 1 முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகின்றன. சாதாரண வரி செலுத்துவோர் மற்றும் சம்பளம் வாங்கும் ஊழியர்கள் பயன்பெறும் வகையில் வரிச் சலுகை வரம்புகள் பலமடங்கு உயர்த்தப்பட்டு, சட்டப் பிரிவுகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கவும், நடுத்தர வர்க்கத்தினரின் வரி சுமையை குறைக்கவும் கொண்டு வரப்பட்டுள்ள இந்த அதிரடி மாற்றங்கள் குறித்து இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வருமான வரி விதிகள், சாமானிய மக்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் மிக முக்கியமான மாற்றங்களை உள்ளடக்கியுள்ளன.

வருமான வரி புதிய விதிகள்
சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் இருந்த பழைய வரிச் சட்டத்திற்குப் பதிலாக, தற்போது "வருமான வரிச் சட்டம் 2025" மற்றும் அதற்கான புதிய விதிகள் 2026 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரவுள்ளன. இந்த மாற்றத்தின் மிக முக்கியமான நோக்கம், வரி செலுத்தும் முறையைச் சிக்கலில்லாமல் மாற்றுவதும், தேவையற்ற சட்டப் பிரிவுகளைக் குறைப்பதுமாகும்.
முன்னதாக 819 பிரிவுகளை கொண்டிருந்த இந்தச் சட்டம், இப்போது 536 பிரிவுகளாக குறைக்கப்பட்டுள்ளதுதான் இதன் ஸ்பெஷாலிட்டியாகும்.. இதனால் சட்டத்தின் கடினத்தன்மை குறைந்து, சாதாரண மக்களும் எளிதாக புரிந்துகொள்ளும் வகையில் 23 அதிகாரங்களாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
வாடகை வீட்டுதாரர்களுக்கு ஜாக்பாட்
இந்த புதிய விதிகளில் Salaried class tax அதாவது சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய நிம்மதி என்னவென்றால், வீட்டு வாடகை படி தொடர்பான சலுகை விரிவுபடுத்தப்பட்டிருப்பதே ஆகும்.
இதுவரை HRA exemption new cities அதாவது சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா ஆகிய 4 நகரங்களில் வசிப்பவர்களுக்கு மட்டுமே 50 சதவீத வரி விலக்கு அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் இப்போது பெங்களூரு, புனே, ஐதராபாத் மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களும் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்த 8 நகரங்களில் வாடகை வீட்டில் வசிக்கும் ஊழியர்கள் தங்களின் அடிப்படை சம்பளத்தில் 50 சதவீதம் வரை வரி விலக்கு பெற முடியும். மற்ற நகரங்களில் வசிப்பவர்களுக்கு 40 சதவீத விலக்கு தொடர்ந்து அமலில் இருக்கும்.
சலுகைகள் - நடுத்தர வர்க்கம்
அடுத்த முக்கியமான விஷயம், அன்றாட வாழ்க்கை செலவுகளைக் கருத்தில் கொண்டு பல்வேறு சலுகை வரம்புகள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன. குறிப்பாக, ஒரு குழந்தைக்கு மாதம் 100 ரூபாய் என்று இருந்த கல்விப் படி சலுகை, தற்போது 3,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஹாஸ்டல்களில் தங்கிப் படிக்கும் பிள்ளைகளுக்காக வழங்கப்பட்ட 300 ரூபாய் சலுகை, இனி 9,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆபீஸில் ஊழியர்களுக்கு வழங்கப்படும் உணவு கூப்பன் விலக்கு வரம்பு 50 ரூபாயிலிருந்து 200 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது நடுத்தர வர்க்கத்தினருக்கு பெரும் ஆறுதலை தரும் விஷயமாக பார்க்கப்படுகிறது. ராணுவ வீரர்களுக்கான படிகளும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளன.
பணப் பரிவர்த்தனைகளைப் பொறுத்தவரை, இனி 5 லட்ச ரூபாய்க்கு மேல் கார் போன்ற வாகனங்கள் வாங்கும்போது பான் கார்டு கொடுப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஷேர் மார்க்கெட் பரிவர்த்தனை
ஹோட்டல் மற்றும் ரெஸ்ட்டாரெண்ட்டுகளில் ஒரே நேரத்தில் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாகப் பணம் செலுத்த முடியாது. இதற்கு முன்பு இந்த வரம்பு 50,000 ரூபாயாக இருந்தது. மேலும், அசையா சொத்துக்கள் வாங்கும் போது 20 லட்சம் ரூபாய்க்கு மேல் பரிவர்த்தனை செய்தால் பான் கார்டு விபரங்களை அளிக்க வேண்டும்.
ஷேர்மார்க்கட்டை பொறுத்தவரை, ஒரு நிறுவனம் தனது பங்குகளைத் திரும்பப் பெறும்போது (Buyback) முதலீட்டாளர்களுக்குக் கிடைக்கும் லாபம், இனி மூலதன ஆதாய வரியின் கீழ் வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக, தேவையற்ற படிவங்களைக் குறைத்து, வரி செலுத்துவோருக்கு அதிகப் பலன்களைத் தரும் வகையில் இந்த புதிய விதிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன...!!
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications