Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆர்எஸ்எஸ் கொள்கைகளை மாற்றிக் கொள்ளாது.. பாஜகவுடன் விசிக கூட்டணி? திருமாவளவன் நிபந்தனை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிறுத்தை தன் உடலில் உள்ள புள்ளியை மாற்றிக் கொண்டாலும், ஆர்எஸ்எஸ் எப்போதும் சிந்தனையையும், கொள்கைகளையும் மாற்றிக் கொள்ள மாட்டார்கள் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். கன்னியாகுமரியில் நடைபெற்ற கூட்டத்தில் கொள்கைகளை மாற்றிக் கொண்டால் பாஜகவுடன் கூட்டணி வைப்பதில் சிக்கல் இல்லை என்று பேசியதற்கும் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.

பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்கு எதிராக தீவிரமாக செயல்பட்டு வருபவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன். ஆர்எஸ்எஸ் பேரணிக்கு எதிராக மத நல்லிணக்க பேரணி, தமிழில் மனுதர்ம நூல் வெளியீடு, பாஜகவின் கொள்கைகளில் இருக்கும் பிரச்சினை ஆகியவற்றை தீவிரமாக பேசி வருகிறார்.

இந்த நிலையில் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டமாக இருந்தபோது, தற்போதைய நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்துள்ள கீழ்வெண்மணி கிராமத்தில் கூலி உயர்வுக்காக நடந்த போராட்டத்தில் கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் என 44 தலித் மக்களை ஒரே குடிசையில் வைத்து எரித்து படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு விசிக சார்பாக அஞ்சலி செலுத்தப்பட்டது.

கிறிஸ்தவ மதம்

கிறிஸ்தவ மதம்

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து திருமாவளவன் கூறுகையில், சகோதரத்துவத்தை போதித்த, பேணி பாதுகாத்து வரும் மதம் தான் கிறிஸ்தவம். இயேசுவை பின்பற்றும் மக்கள் அனைவருக்கும் இனி கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்தார். தொடர்ந்து, கூலி உயர்வு கேட்டு போராடிய ஏழை மக்களை குடிசைக்குள் தள்ளி கொலை செய்த அவல நாள் இன்று. 44 பேர் உயிரோடு கொளுத்தப்பட்டார்கள். அது கூலி உயர்வுக்கு எதிரான போரட்டம் மட்டுமல்ல, சாதி வெறிக்கு எதிரான போராட்டம். கம்யூனிஸ்ட்களுடன் இணைந்து மக்கள் உரிமைகளுக்கு போராடிய களத்தில் சாம்பலாக்கப்பட்டார்கள்.

கீழ்வெண்மணி படுகொலை

கீழ்வெண்மணி படுகொலை

அரை நூற்றாண்டு கடந்தும், இந்த மண்ணில் சாதி வெறி தொடர்ந்து வருவது வெட்கக்கேடானது. இந்தியா முழுவதும் சாதி மற்றும் மதத்தின் பெயரால், வன்முறை வெறியாட்டங்கள் நடக்கின்றன. அதனை சங்பரிவார் அமைப்புகள் அதனை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கின்றன. இந்திய அரசியலைப்பு சட்டத்திற்கு ஆபரத்து உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் சகோதரத்துவம், சமத்துவம், மதசார்பின்மை போன்ற விழுமியங்களை பாதுகாக்க உறுதியேற்போம் என்று தெரிவித்தார்.

திருமாவளவன் விளக்கம்

திருமாவளவன் விளக்கம்

தொடர்ந்து, கன்னியாகுமர் மாவட்டத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கொள்கைகளை தான் விமர்சிக்கிறோம் என்று பேசி இருந்தேன். மதசார்பின்மை, சகோதரத்துவம் ஆகியவற்றுக்கு எதிராக இருக்கிறார்கள். அதனால் சங்பரிவார் அமைப்புகள் தங்களின் கொள்கைகளை மாற்றிக் கொண்டு சமூகநீதி, சகோதரத்துவம், மதசார்பின்மை போன்ற கொள்கைகளுக்கு ஆதரவாக பேசினால் விமர்சிக்கப் போவதில்லை. ஒருவேளை கொள்கைகளை மாற்றிக் கொண்டால், அவர்களுடோடு நட்பு பாராட்டுவதில், கூட்டணி வைப்பதில் சிக்கல் இல்லை என்று கூறினேன்.

பாஜகவுடன் கூட்டணி?

பாஜகவுடன் கூட்டணி?

அதற்கு பொருள், பாஜகவுடன் கூட்டணி வைக்க விசிக வேட்கையோடு இருக்கிறது என்பது அல்ல. அவர்களின் கொள்கைகள் மோசமான கொள்கைகள். திருத்திக் கொள்ள வேண்டும் என்பதை முன் நிபந்தனையாக தான் குறிப்பிட்டேன். சிறுத்தை தன் உடலில் உள்ள புள்ளியை மாற்றிக் கொண்டாலும், ஆர்எஸ்எஸ் எப்போதும் சிந்தனையையும், கொள்கைகளையும் மாற்றிக் கொள்ள மாட்டார்கள். ஆகவே அம்பலப்படுத்தும் நோக்கில் கூறினேன் என்று தெரிவித்தார்.

திமுக கூட்டணி

திமுக கூட்டணி

தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி பற்றி கேள்விக்கு, நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணியை முடிவு செய்ய எந்த அவசரமும் இல்லை. தற்போது திமுகவுடான கூட்டணியிலேயே விசிக பயணித்து வருகிறது. எங்கள் கூட்டணியில் எந்த சலசலப்பும் இல்லை. அனைவரும் கட்டுக்கோப்புடன், ஒற்றுமையாக இருக்கிறோம். சனாதன சக்திகளை வீழ்த்த ஒன்றுபட்டு செயல்படுகிறோம் என்று தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+