நாளை ஸ்கூல் லீவ் இல்லை.. பள்ளிகள் செயல்படும்! விடுமுறையை ஈடுகட்ட அறிவுறுத்தல்!
சென்னை : மாண்டஸ் புயல் காரணமாக விடப்பட்ட விடுமுறையை ஈடு செய்யும் வகையில் சென்னையில் நாளை (டிசம்பர் 17) பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் வெள்ளிக்கிழமை பாடத்திட்டத்தை பின்பற்றி நாளை இயங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆரம்ப பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக, சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

சென்னையில் பள்ளிகளுக்கு
வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில், பலத்த காற்றோடு, கனமழை பெய்தது. இதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த டிசம்பர் 9-ஆம் தேதி, அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. அந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் நாளை பள்ளிகளுக்கு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை டைம் டேபிள்
பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "மாண்டஸ் புயல் காரணமாக கடந்த 9-ஆம் தேதி சென்னை மாவட்டத்தில் அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அப்பணி நாளினை ஈடு செய்திடும் பொருட்டு நாளை (சனிக்கிழமை) சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் வெள்ளிக்கிழமை பாடத்திட்டத்தை பின்பற்றி இயங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆரம்ப பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில்
திருவள்ளூரில் பெய்த கனமழை காரணமாக கடந்த நவம்பர் 2-ஆம் தேதி பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது. அந்த விடுமுறையை ஈடுசெய்ய திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு நாளை பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் நாளை இயங்கும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். மேலும் அனைத்து வகை மெட்ரிக் பள்ளிகளும் நாளை முழு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல மாவட்டங்களிலும்
மாண்டஸ் புயல் காரணமாக, தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால், நாளை பெரும்பாலான பகுதிகளிலும் பள்ளிகள் இயங்கும் எனத் தெரிகிறது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் மாணவர்களுக்கு, அந்தந்த பள்ளி நிர்வாகம் மூலம் நாளை பள்ளிகள் செயல்படுவது பற்றி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
கோவை, நீலகிரியில் 2 நாட்களுக்கு மழை வெளுக்க போகுது.. தென் தமிழகத்திலும் மழை கொட்டும்.. வானிலை அலர்ட் -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. குமரி, நீலகிரியில் இன்று விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் ஜில் அப்டேட்! -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர்












Click it and Unblock the Notifications