மீண்டும் ஷிப்ட் முறையில் வகுப்புகள்? - கொரோனா பரவல் தீவிரமடைவதால் பள்ளிகள் அவசர ஆலோசனை!
சென்னை : தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளதால், பள்ளிகளை ஷிப்ட் முறையில் நடத்த ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு ஆன்லைன் முறையில் வகுப்புகளை நடத்தவும் தனியார் பள்ளிகள் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
கொரோனா தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில், விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

மீண்டும் பரவல் தீவிரம்
தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா தொற்று அதிகளவில் பரவி வருகிறது. குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில், கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளது. இதையடுத்து, பொது இடங்களில் பொது மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், அதனை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அச்சத்தில் பொதுமக்கள்
நாளுக்கு நாள் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது, பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் பள்ளிகளில் போதிய கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என பெற்றோர்கள் பலர் அதிருப்தியில் உள்ளனர். தங்கள் பிள்ளைகளுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டால் மிகுந்த அச்சமடைந்து வருகின்றனர்.

பள்ளிகள் மூடப்படுமா?
கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் மூடப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு, சுமார் 2 ஆண்டுகளுக்கு பின்னர் பள்ளிகள் வழக்கம் போல் திறக்கப்பட்டு செயல்பட்டு வரும் நிலையில், தற்போது, மீண்டும் கொரோனா பரவல் மீண்டும் உயர்ந்து வருவது, பெற்றோர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

முதல்வர் ஆலோசனை
இதற்கிடையே கொரோனா பரவல் குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் ஆலோசனை நடத்தினார். அப்போது, கொரோனா பரவல் அதிகரிக்கும் சூழலில் கொரோனா கேர் மையங்களை தயாராக வைத்திருக்குமாறு சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். மேலும், கொரோனா கட்டுப்பாடுகள் எப்போது வேண்டுமானாலும் கடுமையாகலாம் எனவும் தொடக்க பள்ளிகள் மூடப்பட வாய்ப்புள்ளது என்றும் தகவல் கசிந்துள்ளது.

ஷிப்ட் முறையில்
தற்போது வாரம் முழுவதும் அனைத்து வகுப்புகளும் நடைபெறும் நிலையில், பள்ளிகளில் கூட்டத்தை குறைக்கும் வகையில் வகுப்புகளை 2 ஷிப்ட் ஆகப் பிரித்து நடத்தலாமா என்பது குறித்து தனியார் பள்ளிகள் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. ஒருநாள் விட்டு ஒருநாள் மாணவர்கள் பள்ளிக்கு வரும் வகையில், வகுப்புகளை இரண்டாகப் பிரித்து நடத்தும் திட்டம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆன்லைன் வாயிலாக
மேலும், ஐந்தாம் வகுப்பு வரை உள்ள தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு, தொற்று அபாயம் குறையும் வரை ஆன்லைன் முறையில் வகுப்புகளை எடுக்க பரிசீலிக்கலாம் எனறும் கூறப்படுகிறது. ஒரு சில தனியார் பள்ளிகள் பெற்றோரிடம் கருத்துகளை கேட்டு உடனடியாக இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளன.

தனியார் பள்ளிகள்
இதுகுறித்து தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக்குலேசன் மற்றும் சி.பி.எஸ்.இ பள்ளிகள் சங்க மாநில தலைவர் கே.ஆர்.நந்தகுமார் கூறுகையில், ஒருநாள் விட்டு ஒரு நாள் அல்லது காலை மற்றும் மாலை ஷிப்ட் முறையிலோ வகுப்பு நடத்தலாமா என பெற்றோர்களிடம் கருத்து கேட்டு முடிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகள் திறந்து இன்னும் ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் தொற்று அதிகரித்து மாணவர்கள் பாதிக்கப்பட்டால் பள்ளி முழுமையாக மூட வேண்டிய நிலை வரும்.

அரசின் உத்தரவைப் பொறுத்து
அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா தொற்று குறையும் வரை மாணவர்களை பாதியாக குறைத்து வகுப்புகளுக்கு வரவழைப்பது பாதுகாப்பாக இருக்கும் என்பதால் இதுகுறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்டு முடிவு செய்யலாம் என்ற திட்டத்தில் இருக்கிறோம். அரசின் உத்தரவை பின்பற்றி வகுப்புகள் நடத்தப்படும்." எனத் தெரிவித்துள்ளார்.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications