சேது சமுத்திர திட்டம்: யோசித்து முடிவெடுங்க.. மத்திய, மாநில அரசுகளுக்கு.. காயத்ரி ரகுராம் பரபர ட்விட்
சென்னை: சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த முன்வர வேண்டும் என்று தமிழக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், "நிறைய யோசித்து முடிவெடுக்க வேண்டும் என்றும், மத்திய, மாநில அரசுகளுக்கு இது ஒரு வேண்டுகோள் என்றும் காயத்ரி ரகுராம் ட்விட் பதிவிட்டுள்ளார்.
தமிழக சட்டசபை இன்று காலை 10 மணிக்கு கூடியதும் முதல் நிகழ்வாக கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதனை தொடர்ந்து நேரமில்லா நேரத்தில், சேதுசமுத்திர திட்டம் தொடர்பாக அரசினர் தனித்தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார்.

சேது சமுத்திர திட்டம்
அப்போது முதல்வர் மு.க ஸ்டாலின், "150 ஆண்டு காலக் கனவுத் திட்டமான சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றித் தர வேண்டுமென்ற தீர்மானத்தை இந்த மாமன்றத்தில் முன்மொழிவதை வரலாற்றுக் கடமை என்று நான் கருதுகிறேன். அண்ணாவின் கனவுத் திட்டம் அது. கருணாநிதி நிறைவேற்றப் பாடுபட்ட திட்டம் அது. பாக் நீரினையையும், மன்னார் வளைகுடாவையும் இணைக்கும் ஆடம்ஸ் பாலத்தின் குறுக்கே வெட்டப்பட வேண்டிய கால்வாயின் பெயர் தான் சேதுசமுத்திரத் திட்டம். தமிழ்நாட்டு மக்களின் நீண்டகால கனவு திட்டமான சேது சமுத்திரத் திட்டம் தொடர்புடைய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

நிறைவேற்றித் தர வேண்டும் என்று..
சேது சமுத்திரத் திட்டத்தை மாற்றுப்பாதையில் செயல்படுத்துவோம் என்று மத்திய அரசு சொல்லி இருக்கிறது. ஆனால் 'ராமேஸ்வரம் கடற்பகுதியில் இருந்தது எந்த மாதிரி கட்டுமானம் என்பதை கூறுவது கடினம் என்று மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் சொல்லி இருக்கிறார். இத்தகைய நிலைப்பாட்டுக்கு மத்திய அரசு வந்துள்ள நிலையில் சேது சமுத்திரத் திட்டத்தைப் போராடியும் வாதாடியும் செயல்படுத்த வைக்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் இந்தத் தீர்மானத்தை இப்பேரவையின் சார்பில் நிறைவேற்றித் தர வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.

காயத்ரி ரகுராம் ட்விட்
இதையடுத்து இந்த தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேறியது. முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்தை தி.மு.க. கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அ.தி.மு.க., பா.ஜ.க.வரவேற்றது. இந்த நிலையில், சேது சமுத்திர திட்ட விவகாரம் தொடர்பாக காயத்ரி ரகுராம் தனது ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார். காயத்ரி ரகுராம் தனது ட்விட் பதிவில் கூறியிருப்பதாவது:- சேது சமுத்திரம் திட்டம் பல ஆண்டுகளாக தீண்டப்படாத ஒன்று.

தொப்புள் கொடி போன்றது
புவியியல் ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் சேது சமுத்திரம் திட்டம் முடிவு செய்வதற்கு முன் ராமர் பாலத்தை உணர்வுப்பூர்வமாக என்னால் மறுபரிசீலனை செய்யக்கூட நினைக்க முடியவில்லை. இது இரண்டு தமிழ் நிலங்களை இணைக்கும் ஒரு இயற்கை பாலம். இது இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் தொப்புள் கொடி போன்றது. பொருளாதார வளர்ச்சியை ஒரு பக்கம் வைத்துக்கொண்டு.. இது நிச்சயமாக திராவிடத்தின் புனித 3 கடலையும் இணைக்கும் இடம் இன்னொரு பக்கம் வைத்துக்கொண்டு.. அதை தொந்தரவு செய்வது சரியாக இருக்கும் என நினைக்கவில்லை. நிறைய யோசித்து முடிவெடுக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளுக்கு இது ஒரு வேண்டுகோள்" என்று பதிவிட்டுள்ளார்.

அண்ணாமலை மீது விமர்சனம்
கடந்த வாரத்தில் தமிழக பாஜகவில் இருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் அதிரடியாக அறிவித்தார். அதன்பிறகு ட்விட்டரில் தொடர்ச்சியாக கருத்துக்களை பதிவிட்டு வரும் காயத்ரி ரகுராம் அண்ணாமலை மீது நேரடியாக விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இப்படி தொடர்ச்சியாக பல்வேறு விஷயங்கள் குறித்தும் காயத்ரி ரகுராம் தனது ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார். அவரது அடுத்த மூவ் என்னவாக இருக்கும் என்றும் இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
-
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications