Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சேது சமுத்திர திட்டம்: யோசித்து முடிவெடுங்க.. மத்திய, மாநில அரசுகளுக்கு.. காயத்ரி ரகுராம் பரபர ட்விட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த முன்வர வேண்டும் என்று தமிழக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், "நிறைய யோசித்து முடிவெடுக்க வேண்டும் என்றும், மத்திய, மாநில அரசுகளுக்கு இது ஒரு வேண்டுகோள் என்றும் காயத்ரி ரகுராம் ட்விட் பதிவிட்டுள்ளார்.

தமிழக சட்டசபை இன்று காலை 10 மணிக்கு கூடியதும் முதல் நிகழ்வாக கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதனை தொடர்ந்து நேரமில்லா நேரத்தில், சேதுசமுத்திர திட்டம் தொடர்பாக அரசினர் தனித்தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார்.

சேது சமுத்திர திட்டம்

சேது சமுத்திர திட்டம்

அப்போது முதல்வர் மு.க ஸ்டாலின், "150 ஆண்டு காலக் கனவுத் திட்டமான சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றித் தர வேண்டுமென்ற தீர்மானத்தை இந்த மாமன்றத்தில் முன்மொழிவதை வரலாற்றுக் கடமை என்று நான் கருதுகிறேன். அண்ணாவின் கனவுத் திட்டம் அது. கருணாநிதி நிறைவேற்றப் பாடுபட்ட திட்டம் அது. பாக் நீரினையையும், மன்னார் வளைகுடாவையும் இணைக்கும் ஆடம்ஸ் பாலத்தின் குறுக்கே வெட்டப்பட வேண்டிய கால்வாயின் பெயர் தான் சேதுசமுத்திரத் திட்டம். தமிழ்நாட்டு மக்களின் நீண்டகால கனவு திட்டமான சேது சமுத்திரத் திட்டம் தொடர்புடைய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

நிறைவேற்றித் தர வேண்டும் என்று..

நிறைவேற்றித் தர வேண்டும் என்று..

சேது சமுத்திரத் திட்டத்தை மாற்றுப்பாதையில் செயல்படுத்துவோம் என்று மத்திய அரசு சொல்லி இருக்கிறது. ஆனால் 'ராமேஸ்வரம் கடற்பகுதியில் இருந்தது எந்த மாதிரி கட்டுமானம் என்பதை கூறுவது கடினம் என்று மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் சொல்லி இருக்கிறார். இத்தகைய நிலைப்பாட்டுக்கு மத்திய அரசு வந்துள்ள நிலையில் சேது சமுத்திரத் திட்டத்தைப் போராடியும் வாதாடியும் செயல்படுத்த வைக்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் இந்தத் தீர்மானத்தை இப்பேரவையின் சார்பில் நிறைவேற்றித் தர வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.

காயத்ரி ரகுராம் ட்விட்

காயத்ரி ரகுராம் ட்விட்

இதையடுத்து இந்த தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேறியது. முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்தை தி.மு.க. கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அ.தி.மு.க., பா.ஜ.க.வரவேற்றது. இந்த நிலையில், சேது சமுத்திர திட்ட விவகாரம் தொடர்பாக காயத்ரி ரகுராம் தனது ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார். காயத்ரி ரகுராம் தனது ட்விட் பதிவில் கூறியிருப்பதாவது:- சேது சமுத்திரம் திட்டம் பல ஆண்டுகளாக தீண்டப்படாத ஒன்று.

தொப்புள் கொடி போன்றது

தொப்புள் கொடி போன்றது

புவியியல் ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் சேது சமுத்திரம் திட்டம் முடிவு செய்வதற்கு முன் ராமர் பாலத்தை உணர்வுப்பூர்வமாக என்னால் மறுபரிசீலனை செய்யக்கூட நினைக்க முடியவில்லை. இது இரண்டு தமிழ் நிலங்களை இணைக்கும் ஒரு இயற்கை பாலம். இது இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் தொப்புள் கொடி போன்றது. பொருளாதார வளர்ச்சியை ஒரு பக்கம் வைத்துக்கொண்டு.. இது நிச்சயமாக திராவிடத்தின் புனித 3 கடலையும் இணைக்கும் இடம் இன்னொரு பக்கம் வைத்துக்கொண்டு.. அதை தொந்தரவு செய்வது சரியாக இருக்கும் என நினைக்கவில்லை. நிறைய யோசித்து முடிவெடுக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளுக்கு இது ஒரு வேண்டுகோள்" என்று பதிவிட்டுள்ளார்.

அண்ணாமலை மீது விமர்சனம்

அண்ணாமலை மீது விமர்சனம்

கடந்த வாரத்தில் தமிழக பாஜகவில் இருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் அதிரடியாக அறிவித்தார். அதன்பிறகு ட்விட்டரில் தொடர்ச்சியாக கருத்துக்களை பதிவிட்டு வரும் காயத்ரி ரகுராம் அண்ணாமலை மீது நேரடியாக விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இப்படி தொடர்ச்சியாக பல்வேறு விஷயங்கள் குறித்தும் காயத்ரி ரகுராம் தனது ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார். அவரது அடுத்த மூவ் என்னவாக இருக்கும் என்றும் இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+