இந்து மதத்தில் வாழ்வுக்கான அர்த்தங்கள் உள்ளது.. மதம்மாறிய சொற்பொழிவாளர் டி.ஏ ஜோசப் கருத்து
சென்னை: வாழ்வுக்கான அர்த்தங்கள் இந்து மதத்தில் உள்ளது என்று கூறியுள்ளார் ஆன்மீக சொற்பொழிவாளர் ஜோசப். நான் திருப்தியடைந்த ஆன்மிகத்தை மக்களிடம் கொண்டு செல்ல மனம் விரும்புகிறது என்று தெரிவித்துள்ளார் ஜோசப். இந்து மதத்திற்கு மாறி விட்டாலும் ஸ்ரீ வைகுண்டவாசி ஸ்ரீ வரத யதிராஜ ஜீயர் சுவாமிகள் அறிவுறுத்தியபடி ஜோசப் என்ற பெயரிலேயே சொற்பொழிவாற்றி வருகிறேன் என்றும் கூறியுள்ளார்
தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதத்தில் இலக்கிய பட்டப் படிப்பை முடித்த ஜோசப் மதுரையில் ஆங்கில பேராசிரியராக பணியாற்றியுள்ளார். இந்து மதத்தின் மீது ஈர்க்கப்பட்டு எத்தனையோ நூல்களை எழுதியிருக்கிறார். இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் புலமை பெற்ற இவர் முதன்முதலாக 1991இல் எழுதிய 'கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டியா' என்ற புத்தகம், காஞ்சி சங்கராச்சாரியார் உட்பட தமிழகத்தின் பல மடாதிபதிகளால் பாராட்டப்பட்டது. 12 ஆழ்வார்களை பற்றி ஜோசப் எழுதிய கடவுளை காட்டும் கண்ணாடிகள் புத்தகமும் அமெரிக்கா வாழ் இந்தியர்களிடம் வரவேற்பை பெற்றது.

கத்தோலிக்கராக வாழ்க்கையை தொடங்கிய இவர் தனது வாழ்க்கை பயணத்தை இந்து மதத்தை நோக்கி திருப்பினார். ரிஷி தர்மா பவுண்டேசனை கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கினார். அவரது கருத்துக்களில் ஈர்க்கப்பட்டு ரிஷி தர்மா பவுண்டேசனில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளனர். இவரது ஆன்மீக சொற்பொழிவாற்றும் சேவையை பாராட்டும் வகையில் சொற்செல்வன் பட்டம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.
கிறித்தவராக பிறந்த இவருக்கு தனது பத்தாவது வயதில் எழுந்த கேள்வியே இந்து மதத்தின் பக்கம் மீது பார்வையை திருப்ப வைத்தது. ஸ்ரீமான் வீரராகவ ஐயங்கார் மூலம் இந்து மதத்தை பற்றி அறிந்து பல கேள்விகளுக்கு விடையை கண்டு பிடித்தார். அதன்மூலமாக இந்துவாக மதம் மாறி தன்னை அர்ப்பணித்துக்கொண்டு ஆன்மீக சொற்பொழிவாற்றி வருகிறார். 28 வயதில் இருந்து ஆன்மீக சொற்பொழிவாற்றும் ஜோசப், கோவில்களில் ராமாயணம்,மகாபாரத கதைகளை கூறி வருகிறார்.
சனாதன தர்மம் என்பது காலத்தால் அழியாது நிலைத்து நிற்கும் என்று பொருள். ஆனால் சனாதன தர்மம் என்றாலே வர்ணாசிரம தர்மம் என்று சிலர் கூறுவது உண்மையல்ல. இன்றைக்கு நிறைய சமூக புரட்சிகளால் சனாதன தர்மம் காணாமல் போய் விட்டது என்று கூறியுள்ளார் ப்ரவசன பாஸ்கரன் ஸ்ரீ டி.ஏ ஜோசப். இன்றைக்கும் நான்கு வகையான தொழில் பாகுபாடு இருந்து கொண்டுதான் இருக்கிறது. உலகத்தில் உள்ள எல்லா நாடுகளிலும் இருந்து கொண்டுதான் இருக்கும். நான்கு வகையான தொழில் பாகுபாடு இல்லாமல் சனாதன தர்மம் இல்லை. இனப்பாகுபாடு இல்லாமல் இருந்தாலும் தொழில் பாகுபாடு இன்றைக்கும் இருந்து கொண்டு உள்ளது என்று கூறியுள்ளார் டி.ஏ. ஜோசப்.
இந்து மத புராண கதைகளைப் பற்றி தெளிவான விளக்கம் அளித்துள்ளார். அனுமனை நம்பினால்தான் ராமாயணம் பற்றி தெரியும். இந்து மத கதைகளை நம்ப வேண்டும். அனுமன் பறந்தது எப்படி என்று பலர் கேட்கலாம். புராண கதைகள் ஆன்மீகத்தில் கூறப்பட்டுள்ளது. அவை கட்டுக்கதைகள் அல்ல. அமானுஷ்யம் என்ற வார்த்தை உள்ளது. கண்களால் பார்க்க முடியாத உணர மட்டுமே முடியக்கூடியவை அமானுஷ்யம். நாய் குரைப்பது சாதாரண விசயம். அதே நேரத்தில் அந்த நாய் மனிதன் போல பேசுவது சாதாரண நிகழ்வு அல்ல அது அமானுஷ்யம். மனித புலப்பாடுக்கு அப்பாற்பட்டது அமானுஷ்யம்.

ஆழ்நிலை மனோ தியானம் பற்றி தெரிந்தவர்கள் அமர்ந்த இடத்தில் இருந்து மூன்று அடி பறந்து காட்டுகிறார்கள். சாதாரண மனிதர்களால் இன்றைக்கு பறக்கும் போது அபரிமிதமான சக்தி கொண்ட அனுமர் இலங்கைக்கு பறந்து சென்றிருக்க முடியாதா என்று கேட்கிறார் ஜோசப். இந்து மத நம்பிக்கைகளை இந்துக்களாக பிறந்தவர்களே கேலியும் கிண்டலும் செய்யும் போது கிறிஸ்தவ மதத்தில் பிறந்து 10000 ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்தியுள்ளார் ஜோசப்.
வாழ்வுக்கான அர்த்தங்கள் இந்து மதத்தில் உள்ளது. எனவே, நான் திருப்தியடைந்த ஆன்மிகத்தை மக்களிடம் கொண்டு செல்ல மனம் விரும்புகிறது. இளைஞர்களுக்கும் ஆன்மிகம் சென்றடையும் வகையில் சமூகநீதியுடன் கதைகளை நான் விவரிப்பதால், எனது சொற்பொழிவு சற்று வித்தியாசமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். இந்து மதத்திற்கு மாறி விட்டாலும் ஸ்ரீ வைகுண்டவாசி ஸ்ரீ வரத யதிராஜ ஜீயர் சுவாமிகள் அறிவுறுத்தியபடி ஜோசப் என்ற பெயரிலேயே சொற்பொழிவாற்றி வருகிறேன் என்று கூறியுள்ளார்.
-
செஞ்சுரி போட்ட வெயில்.. வேலூர் உட்பட 3 மாவட்டங்களில் 100 டிகிரியை கடந்தது! ஆட்டம் தொடங்கியாச்சு! -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
மகாபலிபுரம் டூ எண்ணூர்.. இந்தியாவின் மிக முக்கிய ரோடு.. மின்னல் வேகத்தில் தயார் ஆகும் 10 வழிச் சாலை -
சென்னை - அரக்கோணம் மின்சார ரயில் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி.. கோடை காலத்தில் இனி நிம்மதியாக போலாம் -
காலியாக போகும் காவிரி.. வேலையை காட்டும் வெயில்! இந்த வருஷம் சம்பவம் இருக்கு! வெதர்மேன் வார்னிங்! -
கோவை, நீலகிரியில் 2 நாட்களுக்கு மழை வெளுக்க போகுது.. தென் தமிழகத்திலும் மழை கொட்டும்.. வானிலை அலர்ட் -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. குமரி, நீலகிரியில் இன்று விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் ஜில் அப்டேட்! -
நீலகிரியில் தமிழக பகுதிக்கு உரிமைக் கொண்டாடும் கேரளம்! எல்லையில் பதற்றம்! தவாக வேல்முருகன் கண்டனம் -
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி












Click it and Unblock the Notifications