நீ மட்டும் தானே இருக்க..இரவில் வாட்ஸ்அப் வீடியோ கால்! போன் முழுவதும் ‘அந்த’ சாட்டிங்! பெற்றோரே உஷார்
சென்னை : வாட்ஸ் ஆப் வீடியோ காலில் மாணவியின் ஆடைகளை கழற்ற சொன்ன மாணவனை கைது செய்து சிறையில் போலீசார் அடைத்துள்ள நிலையில், இதேபோல் பல இளம்பெண்களிடம் அம்மாணவன் ஆபாச வீடியோ கால் சாட்டிங்கில் பேசியதைக் கண்டு காவல்துறையினரே அதிர்ந்து போயுள்ளனர்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் கைகளிலும் ரேகை போல செல்போன் மாறிவிட்டது. எந்நேரமும் செல்போனிலேயே உலாவி கிடக்கின்றனர் மாணவர்கள்.
ஒருபுறம் இணையத்தில் கொட்டிக் கிடக்கும் அரிய தகவல்கள், ஆன்லைன் வகுப்பு என செல்போன்கள் பயனுள்ளதாக இருந்தாலும் மறுபுறம் இன்ஸ்டாகிராம், பப்ஜி, ஃப்ரீ பையர் என கேம்களில் மூழ்கிக் கிடக்கின்றனர்.
கனிமொழி எம்.பி. பிறந்தநாளுக்கு ஸ்பெஷல் கிஃப்ட்! மாற்றியோசித்த திமுக மகளிரணி பிரமுகர்!
சைபர் கிரைம்
இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட வலைதளங்களில் வீடியோக்களையும் போட்டோக்களையும் வெளியிட்டு பிரபலமாக துடிக்கும் இளம் பெண்கள் சிக்கலில் சிக்கிக் கொள்ளும் சம்பவங்கள் அரங்கேறி வருவது பெற்றோர்களையும் சமூக ஆர்வலர்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இன்ஸ்டாகிராமில் நான்கு வீடியோக்களை வெளியிட்டவுடன் சூப்பர், பிரமாதம், அருமை என கமெண்ட் செய்து அவர்களை தனது வலையில் வீழ்த்தி வாழ்க்கையை சீரழிக்கும் கொடூரர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
கல்லூரி மாணவன்
அந்த வகையில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வாட்ஸ் ஆப் எண்களை பெற்று வீடியோ காலில் மாணவியின் ஆடைகளை கழற்ற சொன்னவனை கைது செய்து சிறையில் போலீசார் அடைத்துள்ள நிலையில், இதேபோல் பல இளம்பெண்களிடம் அம்மாணவன் ஆபாச வீடியோ கால் சாட்டிங்கில் பேசியதைக் கண்டு காவல்துறையினரே அதிர்ந்து போயுள்ளனர்.
வீடியோ கால்
திருவொற்றியூர் எஸ்பி கோயில் ஒன்றாவது தெருவை சேர்ந்தவர் பரத். ஆர்கே நகரில் உள்ள தனியார் கல்லூரியில் பிஏ படித்து வந்திருக்கிறார். பரத்துக்கும் பாரிமுனையில் உள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருக்கும் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து மாணவியின் பதிவுகளுக்கு லைக் கமெண்ட் செய்து வந்த பரத் தொடர்ந்து அந்த மாணவியிடம் பேசியதோடு வாட்ஸ் அப் எண்ணையும் பெற்றிருக்கிறார். நட்பு அடிப்படையில் அந்த மாணவி பேச ஆரம்பித்த நிலையில் ஒரு கட்டத்தில் பரத்தின் தொந்தரவுகள் எல்லை மீற ஆரம்பித்திருக்கிறது.
அதிரடி கைது
இரவு நேரங்களில் வீட்டில் யாரும் இல்லை என்றால் எனக்கு வீடியோ கால் செய் என கூறியதோடு அடிக்கடி அந்த மாணவியிடம் ஆபாசமாக பேசுவதை கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார். மேலும் இரவு நேரங்களில் மாணவிக்கு வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்ட பரத் மாணவியின் உடைகளை கழட்டுமாறு கூறி இருக்கிறார். இதனால் அதிர்ந்து போன அந்த மாணவி தனக்கு தொல்லை கொடுத்த பரத் குறித்து தனது பெற்றோரிடம் கூறியிருக்கிறார். இதை அடுத்து மாணவியின் பெற்றோர் திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய அதிகாரிகளிடம் புகார் அளித்திருக்கிறார்.
ஆபாச சாட்
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த திருவொற்றியூர் போலிசார் பரத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் பரத்தினுடைய தொலைபேசியை பார்க்கும் போது பல பெண்களிடம் இது போல் ஆசை வார்த்தை கூறி வீடியோ காலில் ஆபாசமாக பேசுவதை புகைப்படம் எடுத்து வைத்திருப்பது தெரியவந்தது. .தொடர்ந்து மன்மத லீலைகளில் ஈடுபட்டு வந்த திருவொற்றியூர் மன்மதனை தைரியமாக காவல் நிலையத்தில் வந்து புகார் அளித்த மாணவியின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். அதே நேரத்தில் பெண் குழந்தைகளின் நடவடிக்கைகளையும் பெற்றோர் கண்காணிக்க வேண்டியது அவசியம் என போலீசார் எச்சரித்துள்ளனர்.