முதல்வர் ஆய்வு.. ராணிப்பேட்டை எஸ்பி உள்பட 5 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஆய்வை தொடர்ந்து ராணிப்பேட்டை எஸ்பி உள்பட 5 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 5 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக பணி இடமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் ஆய்வை தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் மாற்றப்பட்ட நிலையில் அடுத்த சில மணிநேரங்களில் அம்மாவட்ட எஸ்பியும் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் அவ்வப்போது ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று பகலில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இதன் தொடர்ச்சியாக இன்று இரவு 5 ஐபிஎஸ் அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. தமிழ்நாடு அரசின் உள்துறை செயலாளர் பணிந்தீர ரெட்டி பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

ராணிப்பேட்டை எஸ்பி மாற்றம்
அதன்படி ராணிப்பேட்டை எஸ்பியாக இருந்த தீபா சத்யன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவர் மாநில காவல் கட்டுப்பாட்டு அறை எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தீபா சத்யனுக்கு பதிலாக சென்னைப் பெருநகர காவல் துறையின் சைபர் க்ரைம் பிரிவின் துணை ஆணையர் கிரண் சுருதி ராணிப்பேட்டை புதிய எஸ்பியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கடலூர் எஸ்பி இடமாற்றம்
மேலும் கடலூர் எஸ்பி சக்தி கணேசன், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சூப்பிரண்டாக மாற்றப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக சென்னை கொளத்தூர் துணை ஆணையர் ராஜாராம் கடலூர் எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார். மேலும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய எஸ்பியா ரவளி பிரியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கலெக்டர்கள் மாற்றம்
முன்னதாக திருப்பத்தூர், ராணிப்பேட்டை கலெக்டர்கள் உள்ளிட்ட 3 ஐஏஎஸ் அதிகாரிகள் இன்று இடமாற்றம் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை தலைமை செயலாளர் இறையன்பு பிறப்பித்தார். அதன்படி சமூக பாதுகாப்பு இயக்குநர் வளர்மதி, ராணிப்பேட்டை கலெக்டராக நியமனம் செய்யப்பட்டார். ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன், திருப்பத்தூர் கலெக்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் திருப்பத்தூர் கலெக்டர் அமர் குஷாவா சமூக பாதுகாப்புத் துறை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டார்.

முதல்வர் ஆய்வை தொடர்ந்து..
முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் களஆய்வு மேற்கொண்டார். வேலூரில் நடந்த களஆய்வில் திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத்திட்டங்கள் குறித்தும் ஆய்வு செய்தார். இந்நிலையில் தான் தற்போது ராணிப்பேட்டை எஸ்பி, கலெக்டர் மற்றும் திருப்பத்தூர் கலெக்டர் ஆகியோர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தியா முழுவதும் சனிக்கிழமை அன்று ரமலான் பண்டிகை.. சவுதி அரேபியாவில் இன்று ரம்ஜான் கொண்டாட்டம்! -
முடியல.. கொளுத்துது வெயில்! வெளியே போகாதீங்க! தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய வார்னிங்! -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்!












Click it and Unblock the Notifications