Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்ன சாப்பிடுகிறீர்கள்.. டீ யா.. காஃபியா..? நரிக்குறவர்களை வாஞ்சையோடு உபசரித்த முதல்வர் ஸ்டாலின்!

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: விருதுநகரில் தன்னை சந்திக்க வந்த நரிக்குறவர்களை வாஞ்சையோடு வரவேற்று பேசி தேநீர் கொடுத்து உபசரித்து அனுப்பி வைத்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததற்காக, முதல்வரை சந்தித்து நரிக்குறவர் சமுதாயத்தினர் நன்றி தெரிவித்தனர்.

அப்போது தன்னை சந்திக்க வந்தவர்களை அமர வைத்து பேசி அவர்களுக்கு விருந்தோம்பல் செய்து கவனம் ஈர்த்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

இதனிடையே இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது;

பழங்குடியினர்

பழங்குடியினர்

'பழங்குடியினர்' பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என்ற நரிக்குறவர் இன மக்களின் நீண்டநாள் கோரிக்கைக்காகக் கழகமும் கழக அரசும் எடுத்த தொடர் முயற்சிகளின் விளைவாக, ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் அதற்கு நேற்று ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், இதற்கு முன்னதாகவே, கடந்த ஆண்டு நவம்பர் 4-ஆம் தேதி, செங்கல்பட்டு மாவட்டம் பூஞ்சேரிக்குச் சென்று நரிக்குறவர் மற்றும் பிற விளிம்புநிலை மக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளையும் வளர்ச்சித்திட்டப் பணிகளுக்கான ஆணைகளையும் வழங்கினேன்.

நரிக்குறவர்

நரிக்குறவர்

இதனைத் தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் நரிக்குறவர், பழங்குடியினர் மற்றும் இதர விளிம்பு நிலை மக்கள் வசிக்கும் கிராமங்களில் நேரடியாகக் கள ஆய்வு மேற்கொண்டு, அங்கு வசிக்கும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் அரசின் சார்பாக மேற்கொள்ள வேண்டிய நலத்திட்ட உதவிகளைக் கண்டறிந்து தேவைகள் மதிப்பீட்டுப் பட்டியல் தயார் செய்திடவும் தலைமைச் செயலாளர் வாயிலாக அறிவுறுத்தப்பட்டது.

என்னென்ன செய்திருக்கிறோம்?

என்னென்ன செய்திருக்கிறோம்?

அதனடிப்படையில், 5,875 குடியிருப்புப் பகுதிகளில் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களின் தேவைகள் மதிப்பிடப்பட்டு, புதிய கான்கிரீட் வீடுகள், குடிநீர் இணைப்புகள், மின்சார இணைப்புகள், இலவச வீட்டு மனைப் பட்டாக்கள், குடும்ப அட்டைகள், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டைகள், வாக்காளர் அடையாள அட்டைகள், சாதிச் சான்றிதழ்கள், நலவாரிய அட்டைகள், பல்வேறு உதவித் தொகைகள், சாலை வசதி, திறன் பயிற்சி உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன.

நேரில் நன்றி

நேரில் நன்றி

நரிக்குறவர்கள் பழங்குடியினராக அறிவிக்கப்படுவார்கள் என்கிற மகிழ்ச்சியான செய்தியும் வெளியாகியிருக்கும் இவ்வேளையில், நரிக்குறவர் இன மக்களின் சமூகநீதிக்காக அனைத்து மட்டங்களிலும் கழக அரசு மேற்கொண்ட தொடர் முயற்சிகளுக்காகவும், மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்காகவும் நரிக்குறவர் இன மக்களின் பிரதிநிதிகள் விருதுநகரில் இன்று என்னைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+