இதுவரை ரூ.181 கோடி வந்துள்ளது.. கொரோனா நிதி அளிக்க நேரில் வர வேண்டாம் - மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிக்காக மேலும் ரூ.50 கோடியை தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக குறைந்து ஆறுதல் அளித்து வருகிறது. ஆனால் இன்னும் கட்டுக்குள் வரவில்லை

கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகத்தில் நாளை முதல் 31-ம் தேதி வரை தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகளை தவிர அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பணிகளை மேற்கொள்ள அரசுக்கு நிதி உதவி அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டது.இதனை தொடர்ந்து அரசியல், சினிமா, விளையாட்டு என பல்வேறு பிரபலங்களும், பொதுமக்களும் அரசுக்கு நிதி உதவி செய்து வருகின்றனர். இவ்வாறு வந்து குவியும் கொரோனா நிதியை தமிழக அரசு வெளிப்படையாக அறிவித்து வருகிறது.
தமிழகத்துக்கு தேவையான மருந்துகள்- ஆக்சிஜனுக்காக ரூ.50 கோடியை தமிழக அரசு ஏற்கனவே ஒதுக்கி இருந்தது. இந்த நிலையில் RTPCR கிட்கள் வாங்கிட மேலும் ரூ.50 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.
இதுவரை கொரோனா நிதிக்காக 181 கோடி ரூபாய் வந்துள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது.
இந்த தகவலை முதல்வர் மு.க.ஸ்டாலினும் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நாளை முதல் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு போடப்படுவதால் ஊரடங்கு காலத்தில் கொரோனா நிதியை அளிக்க தன்னை யாரும் சந்திக்க வர வேண்டாம் என்று மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துளளார். முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இணைய வழியில் (http://ereceipt.tn.gov.in/cmprf.html) நிதியை செலுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.
-
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications