பொங்கல் பரிசு ரூ.3000 உறுதியாகிறது.. எப்போது முதல் ரேஷனில் வழங்கப்படும்? கசிந்த தகவல்! சூப்பர்
சென்னை: 2026ம் ஆண்டு பொங்கல் பரிசுத் தொகையானது ஜனவரி 7ஆம் தேதி முதல் விநியோகிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த வருடம் இதே காலகட்டத்தில், ஜனவரி 9ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, அரசு பொங்கல் பண்டிகைக்கான கரும்பு கொள்முதலை ஜனவரி மாதத்தின் முதல் வாரத்திற்குப் பிறகு மட்டுமே தொடங்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வருகின்ற 2026ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி தைப்பொங்கல் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ளது.

பொங்கல் பண்டிகை
வரவிருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 ரொக்கப் பரிசாக வழங்க முதல்வர் மு.க. ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிதித்துறை அதிகாரிகளின் ஒப்புதல் இதற்கு கிடைத்துள்ள நிலையில், ஆரம்பத்தில் ரூ.5,000 வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இப்போது ரூ. 3000 வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
எனினும், மாநிலத்தின் நிதி நிலைமையை கருத்தில் கொண்டு இம்முடிவு மறுபரிசீலனை செய்யப்பட்டுள்ளது. ரூ.5,000 வழங்கினால் கடுமையான நிதி இழப்பு ஏற்படும் என நிதித்துறை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதைத் தொடர்ந்து, ரூ.3,000 வழங்குவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், இதனால் பெரிய நிதிச் சுமை இருக்காது என முதல்வரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர்களின் பாரம்பரிய அடையாளமாக கொண்டாடப்படும் பொங்கல் திருநாள், விவசாயத்திற்கும் மனித குலத்திற்கும் நன்றி செலுத்தும் முக்கிய பண்டிகையாகும். இந்த பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாட உதவும் வகையில், ஒவ்வொரு வருடமும் பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்படுகின்றன.
பொங்கல் பண்டிகை பரிசு
முதலில் பரிசாக ரூ.5,000 வழங்க தமிழ்நாடு அரசு வட்டாரங்கள் திட்டமிட்டதாக கூறப்பட்டது. அதன்படி, ஒன்றிய மற்றும் மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், சர்க்கரை அட்டைதாரர்கள் மற்றும் பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து, மற்ற அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இந்த பரிசு நியாயவிலை கடைகள் மூலம் வழங்கப்படும் என தகவல் வெளியானது.
இருப்பினும், தமிழகத்தின் அதிகரித்துவரும் நிதி பற்றாக்குறை, ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் பல நலத்திட்டங்கள், மானியங்கள், உட்கட்டமைப்பு திட்டங்களுக்கான ஒதுக்கீடுகள், மற்றும் மகளிர் உரிமைத் தொகை திட்ட விரிவாக்கம் போன்ற காரணங்களால் நிதி சவால்கள் அதிகரித்தன. இதன் விளைவாக, ரூ.5,000-க்கு பதிலாக ரூ.3,000 வழங்க அதிகாரிகள் பரிந்துரைக்க, முதல்வர் ஸ்டாலின் அதனை ஏற்றுக்கொண்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முதல்வர் ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார்
மகளிர் உரிமைத் தொகை திட்டம் ஏற்கனவே விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த விரிவாக்கப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வரும் டிசம்பர் 13ஆம் தேதி முதல் இந்த விரிவாக்கப்பட்ட திட்டம் செயல்படத் தொடங்கியுள்ளது.
அடுத்த ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு, மக்கள் நலத் திட்டங்கள் மக்களைச் சென்றடைந்துள்ளனவா என்பதை அறிய முதல்வர் ஸ்டாலின் ஒரு முக்கிய கள ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அரசு ஊழியர்களைக் கொண்ட சிறப்புக்குழு நேரடியாக வீடுகளுக்குச் சென்று குடும்பத்தினருடன் பேசும்.
பொங்கல் பரிசு, மகளிர் உரிமைத் தொகை மற்றும் பள்ளி உதவி போன்ற நலத்திட்டங்கள் அவர்களுக்கு கிடைத்துள்ளதா என விசாரித்து, ஒரு படிவத்தின் மூலம் விவரங்களைச் சேகரிப்பார்கள். படிவத்தைச் சமர்ப்பிப்பவர்களுக்கு QR குறியீடு வழங்கப்படும், இதன் மூலம் கோரிக்கை நிலையை அறிய முடியும். மக்களின் கோரிக்கைகளுக்கு உடனடித் தீர்வு காணவும், அல்லது அவற்றை தேர்தல் வாக்குறுதிகளாகவும் திமுக தரப்பு முன்வைக்கும் என ஆளும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
ரஷ்யா எடுத்த அதிரடி முடிவு.. உச்சத்துக்கு போகும் பெட்ரோல், டீசல் விலை! இந்தியாவுக்கு நெருக்கடி! -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
இந்திய மக்களுக்கு நன்றி.. இஸ்ரேல் - அமெரிக்க தளங்களை தாக்கும் ஈரான் ஏவுகணையை கவனிச்சீங்களா? பின்னணி -
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா?












Click it and Unblock the Notifications