சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழ்நாட்டில் 30,000-க்கும் கீழே சென்ற கொரோனா.. தொடர்ந்து சரியும் தொற்று .. சென்னைக்கு குட் நியூஸ்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 29,976 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 47 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனா தொற்று கடந்த 4 நாட்களாக குறைந்து வருவது பொதுமக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.

கடலோர மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மிதமான மழை - குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று கடலோர மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மிதமான மழை - குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று

அதே வேளையில் உயிரிழப்பு தினமும் அதிகரித்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை கொரோனா தொற்று நாளுக்கு, நாள் குறைந்து வருவது சென்னைவாசிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மக்களுக்கு ஆறுதல் செய்தி

மக்களுக்கு ஆறுதல் செய்தி

ஓமிக்ரான் வைரஸ் புகுந்த நேரத்தில் இருந்து தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு 30,000-ஐ கடந்த நிலையில் கடந்த நான்கு நாட்களாக பாதிப்பு குறைந்து வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 29,976 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மீண்டும் 30,000-க்கு கீழே கொரோனா வந்துள்ளது. கொரோனா மொத்த பாதிப்பு 32,24,236 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 47 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிப்பு குறைந்தாலும் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

குணமடைந்தவர்கள் எத்தனை?

குணமடைந்தவர்கள் எத்தனை?

சென்னையில் அதிகபட்சமாக 23 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் தினசரி பாதிப்பு தொடர்ந்து குறைந்து ஆறுதலை ஏற்படுத்தினாலும், உயிரிழப்பு உச்சத்தை தொட்டு வருகிறது.செங்கல்பட்டில் 6 பேர் இறந்தனர். தஞ்சாவூரில் 2 பேரும், திருப்பூரில் 2 பேரும் இறந்தனர். இதுவரை கொரோனாவுக்கு 37,359 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 27,507 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 29,73,185 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பை விட குணமடைவோர் விகிதம் குறைவாக இருக்கிறது.

ஆக்டிவ் கேஸ்கள் அதிகம்

ஆக்டிவ் கேஸ்கள் அதிகம்

2,13,692 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆக்டிவ் கேஸ்கள் தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று மட்டும் 1,41,762 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 6,00,24,712 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 5973 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனாபாதிப்பு சற்று குறைந்து வருகிறது.

கன்னியாகுமரி, கோவை

கன்னியாகுமரி, கோவை

செங்கல்பட்டில் 1883 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் 3740 பேருக்கு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 545 பேருக்கும், மதுரையில் 592 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 1035 பேருக்கும், திருவள்ளூரில் 726 பேருக்கும், திருச்சியில் 684 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திருப்பூரில் 1787 பேருக்கும், ஈரோட்டில் 1302 பேருக்கும், சேலத்தில் 1457 பேருக்கும், நாமக்கல்லில் 765 பேருக்கும், தஞ்சாவூரில் 805 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. வேலூரில் 168 பேருக்கும், கிருஷ்ணகிரியில் 944 பேருக்கும், தூத்துக்குடியில் 347 பேருக்கும், நெல்லையில் 612 பேருக்கும், விருதுநகரில் 499 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

English summary
Corona infection has been confirmed in 29,976 people in Tamil Nadu today. A further 47 people died in the corona. The decline in corona infections in Tamil Nadu over the last 4 days has brought relief to the public
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X