"இனிமேல்" பிரச்சனை வரலாம்.. கவனமா இருங்க! டிஜிபி சைலேந்திரபாபு திடீர் ஆர்டர்.. என்ன காரணம்?
சென்னை; தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்துள்ள நிலையில் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு இது தொடர்பாக முக்கிய உத்தரவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நிறைவடைந்து உள்ளது. இதையடுத்து நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழ்நாட்டில் 60.70 % வாக்குகள் பதிவாகி உள்ளது.
பெரும் அசம்பாவிதங்கள் எதுவும் இன்றி அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றது.

அறிக்கை
இந்த நிலையில் இது தொடர்பாக தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. பொது மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் அமைதியான முறையில் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலின் போது பொது மக்கள் சிலர் போன் செய்தும், சமூக ஊடகங்கள் மூலமும் புகார் அளித்தனர். அந்த புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

என்ன சொன்னார்
காவல்துறைக்கு உடனுக்குடன் தகவல் தெரிவித்த பொது மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். பெரும்பாலும் பிரச்சனை இல்லாமல் வாக்குப்பதிவு நடைபெற்றது. சில இடங்களில் சின்ன பிரச்சனைகள், மோதல்கள் நடப்பதாக தகவல்கள் வந்தன. ஆனால் அந்த பிரச்சனைகளும் கூட உடனுக்குடன் நேரில் சென்று தீர்த்து வைக்கப்பட்டது. போலீசார் இந்த பிரச்சனைகளை உடனுக்குடன் தீர்த்து வைத்தனர்.

டிஜிபி சைலேந்திர பாபு
பல்வேறு ரேங்க் அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டனர். எங்கெல்லாம் மோதல்கள் ஏற்பட்டனவோ அங்கெல்லாம் வழக்கு பதியப்பட்டு உள்ளது. இதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. முன்கூட்டியே பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அங்கு கூடுதல் படைகள் குவிக்கப்பட்டு இருந்தனர் . இதனால் பல இடங்களில் மோதல்கள், சச்சரவுகள் தவிர்க்கப்பட்டன.

கவனம்
ஆனால் தேர்தல் பணிகள் இன்னும் முடியவில்லை என்பதை போலீசார் நினைவில் கொள்ளவில்லை. இனிமேல்தான் சில இடங்களில் சில பிரச்சனைகள் தோன்றும் வாய்ப்பு உள்ளது. எனவே போலீசார் கவனமாக இருக்க வேண்டும். தீவிரமாக ரோந்து பணிகளை செய்ய வேண்டும். உள்ளூர் அளவில் பிரச்சனையாக இருக்கும் பகுதிகளை கண்டறிய வேண்டும்.

ரோந்து பணிகள்
அடுத்த 3 நாட்கள் மிக முக்கியம். 1 லட்சம் போலீசார் தற்போது களத்தில் உள்ளனர். அவர்கள் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை செய்ய வேண்டும். வாக்கு எண்ணும் பணிகள் முடியும் வரை கவனமாக இருக்க வேண்டும், என்று தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். வாக்கு எண்ணிக்கைக்கு முன் கலவரம், அசம்பாவிதம் எதுவும் ஏற்பட்டுவிட கூடாது என்று அவர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications