தொழிலதிபர்களின் கடனை தள்ளுபடி செய்த மாதிரி விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யுங்கள்: ராகுல் காந்தி
சென்னை: பெரும் முதலாளிகளின் கடன்களை தள்ளுபடி செய்த பிரதமர் நரேந்திர மோடி, விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தினார்.
விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும், குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதிலும் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லியில் குழுமியுள்ளனர்.

இரண்டாவது நாளாக டெல்லியில் அவர்களது போராட்டம் இன்றும் தொடர்ந்தது.
விவசாயிகள் போராட்டத்திற்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அங்கம் வகிக்கும் கட்சிகள் தவிர்த்து, பிற கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.
பல்வேறு கட்சித் தலைவர்களும் நேரில் சென்று விவசாயிகளுடன் கலந்தாலோசித்து அவர்களுக்கு ஆதரவாக பேசி திரும்பி வருகின்றனர். இந்த நிலையில் மதியம் 3.45 மணி அளவில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி விவசாயிகள் போராட்டம் நடைபெறும் இடத்திற்குச் சென்றார்.
விவசாயிகள் நடுவே அவர் பேசும்போது "பெருமுதலாளிகளின் கடன்களை நரேந்திர மோடி அரசு தள்ளுபடி செய்துள்ளது. அப்படி இருக்கும்போது விவசாயிகளின் கடனை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகள் இலவசத்தையோ, பரிசையோ, எதிர்பார்க்கவில்லை. இது விவசாயிகளின் அடிப்படை உரிமை. இந்தியாவில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் நான் கூறிக்கொள்ள விரும்புவது.. காங்கிரஸ் கட்சி உங்களோடு உள்ளது. நீங்கள் பயப்பட தேவையில்லை.
இந்த நாடு இப்பொழுது மிகப்பெரும் இரு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. அதில் ஒன்று விவசாயிகளின் எதிர்காலம் குறித்த கேள்வி, மற்றொன்று இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு. விவசாயிகள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்திற்கான போராட்டம் இது. தொழிலதிபர்களுக்காக நரேந்திர மோடி அரசு மூன்றரை லட்சம் கோடி ரூபாய் கடன்களை தள்ளுபடி செய்துள்ளது. இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications