அடிமைப்படுத்தும் எண்ணம் இல்லை... நாற்காலியின் மீது நடந்தது பற்றி திருமாவளவன் விளக்கம்
டெல்லிக்கு அவசரமாக புறப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் நாற்காலி மீது ஏறி நடந்தேன் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை: டெல்லிக்கு அவசரமாக புறப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் நாற்காலி மீது ஏறி நடந்தேன்; நான் கீழே விழாமல் சக தொண்டர்கள் பார்த்து கொண்டார்கள்; அடிமைப்படுத்தும் எண்ணம் எப்போதும் இல்லை என்றும் திருமாவளவன் கூறியுள்ளார்.
Recommended Video
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமாக பெய்து வருகிறது. சென்னையில் கொட்டித்தீர்த்த மழையால் பல பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்,
வேளச்சேரியில் உள்ள வீட்டில் இருந்து டெல்லி புறப்பட தயாராக இருந்த நிலையில் அவரது வீட்டை சுற்றி தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றது. அப்போது கட்சித் தொண்டர்கள் பார்வையாளர்கள் அமரும் இருக்கைகள் மீது அவரை ஏற்றி நடக்க வைத்து பின்னர் காருக்குள் அனுப்பினார். இந்த வீடியோவை அக்காட்சியின் இணையதள பிரிவு வெளியிட்டிருந்தது.
இந்த வீடியோவைப் பார்த்த பலரும் மழை தண்ணீரில் கூட இறங்கி நடக்க தயங்குபவர்கள் எப்படி ஒரு தலைவராக இருக்க முடியும் என்றும், அவர் இருக்கையில் ஏறி நிற்க தொண்டர்கள் அவரை தண்ணீரில் நின்றபடி தாங்கி செல்கின்றனர். இது ஒருவிதமான எதேச்சதிகாரம், இதுதான் சமூக நீதியா என்றெல்லாம் அவரை விமர்சித்தனர்.
தற்போது இது விவாத பொருளாக மாறியுள்ளது.

நடந்தது என்ன
இந்நிலையில் இது குறித்து வன்னி அரசு விளக்கம் அளித்திருந்தார். தண்ணீரில் கால் வைத்தால் வீக்கம் அதிகரிக்கும் என்ற பிரச்சினை இருப்பதாலும், நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் ஒரு தலைவரால் எப்படி தண்ணீரில் நனைந்தபடி எப்படி செல்ல முடியும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இருக்கையில் நடந்து சென்ற விவகாரம் குறித்து விளக்கமளித்திருந்தார்.

நாற்காலி மீது ஏறியது ஏன்?
இந்த நிலையில் தான் இருக்கை மீது ஏறிச்சென்றது ஏன் என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். டெல்லிக்கு அவசரமாக புறப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் நாற்காலி மீது ஏறி நடந்தேன் என்று கூறியுள்ளார்.

என் வீடு அல்ல
நான் கீழே விழாமல் சக தொண்டர்கள் பார்த்து கொண்டார்கள், அடிமைப்படுத்தும் எண்ணம் எப்போதும் இல்லை என்று கூறியுள்ள திருமாவளவன்,
நான் தங்கியுள்ளது என் வீடு அல்ல; அது எங்கள் அறக்கட்டளை அலுவலகம் என்றும் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மழையின்போது மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து வரும்; அந்த சமயங்களில் கூட நான் என் தொண்டர்களை விட்டு அங்கிருந்து சென்றதில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

குற்றம் சாட்ட வேண்டாம்
அடிமைப்படுத்துதல் போன்ற மனநிலை எனக்கு இல்லை என்பது என் மீது குற்றம்சாட்டும் பாஜக போன்ற கட்சிகளுக்கு தெரியும்; பேசவேண்டிய விஷயங்கள் எவ்வளவோ இருந்தாலும் அவற்றை விட்டுவிட்டு எங்கள் மீது திட்டமிட்டு அவதூறு பரப்புவதாகவும் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications