சென்னையில் மழை.. தேங்கிய மழைநீர்.. மின்சாரம் பாய்ந்து சிறுவன் உள்பட 3 பேர் உயிரிழப்பு.. மக்களே உஷார்
சென்னை: கடந்த மாதம் சென்னையில் ஏற்பட்ட பாதிப்பே இன்னும் முழுமையாக தீராத நிலையில் இன்று திடீரென கொட்டிய கனமழை சென்னை நகரை புரட்டி போட்டுள்ளது. சென்னை நகர், புறநகர் பகுதிகளில் பலத்த மழை கொட்டியுள்ளது.
இதனால் சென்னை முழுவதும் மீண்டும் வெள்ளத்தில் மிதக்க தொடங்கியுள்ளது குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் மீண்டும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.

13 வயது சிறுவன்
சென்னையில் விடாமல் பேய்மழை கொட்டி வரும் நிலையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதாவது சென்னை மயிலாப்பூர் பகுதியில் மின்சாரம் தாக்கி 13 வயது சிறுவன் உயிரிழந்தான். கனமழையால் அவனது வீட்டின் வெளியே மழைநீர் தேங்கியுள்ளது. அந்த நீரில் மின் வயர் அறுந்து கிடந்த நிலையில் அதில் கால் வைத்தவுடன் மின்சாரம் தாக்கி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

மூதாட்டி உயிரிழப்பு
ஓட்டேரி நியூ பேரண்ட்ஸ் சாலையில் வசித்து வந்தவர் மூதாட்டி தமிழரசி. பலத்த மழையால் அந்த பகுதியில் மழைநீர் தேங்கி நின்ற நிலையில் அதில் நடந்து சென்ற மூதாட்டி தமிழரசி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதேபோல் புளியந்தோப்பில் மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர் மீனா(45). புளியந்தோப்பில் உள்ள அம்மையம்மாள் தெருவில் உள்ள குடியிருப்பில் வசித்து வருகிறார்.

வடமாநில பெண்
அந்த பகுதியில் மழை சற்று ஓய்ந்த நிலையில் கடைக்கு செல்வதற்காக வீட்டை விட்டு வெளியேவந்துள்ளார் அப்போது வீட்டின் இரும்பு கேட்டை தொட்ட போது, அவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.
உடனே மயக்கமடைந்து கீழே விழுந்த அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பிரதே பரிசோதனைக்காக அவரது உடல் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

மக்களே உஷார்
சென்னையின் பல இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெள்ளநீர் குளம்போல் தேங்கியுள்ளது. மின்சார தாக்கும் சம்பவங்களை தடுக்கும் வகையில் மழைநீர் தேங்கி இருக்கும் இடங்களில் மின்தடை செய்யப்பட்டுள்ளது. மழைநீரில் மின்வயர் கிடப்பது தெரியாது என்பதால் மக்கள் மக்கள் மிகவும் எச்சரிகையாக இருக்க வேண்டும். பெற்றோர்கள் குழந்தைகள் மழைநீரில் விளையாடுவதை தடுக்க வேண்டும்.
-
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்!












Click it and Unblock the Notifications