சென்னையில் மழை.. தேங்கிய மழைநீர்.. மின்சாரம் பாய்ந்து சிறுவன் உள்பட 3 பேர் உயிரிழப்பு.. மக்களே உஷார்
சென்னை: கடந்த மாதம் சென்னையில் ஏற்பட்ட பாதிப்பே இன்னும் முழுமையாக தீராத நிலையில் இன்று திடீரென கொட்டிய கனமழை சென்னை நகரை புரட்டி போட்டுள்ளது. சென்னை நகர், புறநகர் பகுதிகளில் பலத்த மழை கொட்டியுள்ளது.
இதனால் சென்னை முழுவதும் மீண்டும் வெள்ளத்தில் மிதக்க தொடங்கியுள்ளது குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் மீண்டும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.

13 வயது சிறுவன்
சென்னையில் விடாமல் பேய்மழை கொட்டி வரும் நிலையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதாவது சென்னை மயிலாப்பூர் பகுதியில் மின்சாரம் தாக்கி 13 வயது சிறுவன் உயிரிழந்தான். கனமழையால் அவனது வீட்டின் வெளியே மழைநீர் தேங்கியுள்ளது. அந்த நீரில் மின் வயர் அறுந்து கிடந்த நிலையில் அதில் கால் வைத்தவுடன் மின்சாரம் தாக்கி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

மூதாட்டி உயிரிழப்பு
ஓட்டேரி நியூ பேரண்ட்ஸ் சாலையில் வசித்து வந்தவர் மூதாட்டி தமிழரசி. பலத்த மழையால் அந்த பகுதியில் மழைநீர் தேங்கி நின்ற நிலையில் அதில் நடந்து சென்ற மூதாட்டி தமிழரசி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதேபோல் புளியந்தோப்பில் மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர் மீனா(45). புளியந்தோப்பில் உள்ள அம்மையம்மாள் தெருவில் உள்ள குடியிருப்பில் வசித்து வருகிறார்.

வடமாநில பெண்
அந்த பகுதியில் மழை சற்று ஓய்ந்த நிலையில் கடைக்கு செல்வதற்காக வீட்டை விட்டு வெளியேவந்துள்ளார் அப்போது வீட்டின் இரும்பு கேட்டை தொட்ட போது, அவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.
உடனே மயக்கமடைந்து கீழே விழுந்த அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பிரதே பரிசோதனைக்காக அவரது உடல் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

மக்களே உஷார்
சென்னையின் பல இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெள்ளநீர் குளம்போல் தேங்கியுள்ளது. மின்சார தாக்கும் சம்பவங்களை தடுக்கும் வகையில் மழைநீர் தேங்கி இருக்கும் இடங்களில் மின்தடை செய்யப்பட்டுள்ளது. மழைநீரில் மின்வயர் கிடப்பது தெரியாது என்பதால் மக்கள் மக்கள் மிகவும் எச்சரிகையாக இருக்க வேண்டும். பெற்றோர்கள் குழந்தைகள் மழைநீரில் விளையாடுவதை தடுக்க வேண்டும்.
-
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம்












Click it and Unblock the Notifications