Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காவலர்களை சுட முயன்ற வட மாநில கொள்ளையன் என்கவுண்டர் - போலீஸ் சுற்றி வளைத்தது எப்படி

ஏரிக்குள் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் காவல்துறையினரிடம் சிக்கியது எப்படி என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. காவல்துறையினரை சுட முயன்ற கொள்ளையனை காவல்துறையினர் என்கவுண்டர் செய்து சுட்டு கொன்றனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெண்ணிடம் நகையை பறித்து விட்டு தப்பியோடி தலைமறைவான கொள்ளையர்களை காவல்துறையினர் பிடித்துள்ளனர். ஒரு கொள்ளையனை சுட்டுக்கொன்ற போலீசார் மற்றொரு கொள்ளையனை கைது செய்து அவரிடம் இருந்த துப்பாக்கி கத்தியை பறிமுதல் செய்தனர். 10 தனிப்படை அமைத்து பல மணி நேர தேடுதல் வேட்டைக்குப் பிறகு காவல்துறையினரிடம் கொள்ளையர்கள் பிடிபட்டது தெரியவந்துள்ளது.

Recommended Video

    வட மாநில கொள்ளையர்களை சுற்றி வளைத்தது எப்படி? | Sriperumbudur

    ஏரியை அடுத்த வனப்பகுதிக்குள் பதுங்கிய கொள்ளையர்களை பிடிக்க 5 ட்ரோன் கேமராக்கள், 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் என ஒரு பெரும் படையே களமிறங்கியது. 15 மணிநேரத்திற்கும் மேல் நடந்த தேடுதல் வேட்டையில் ஆயுதங்களுடன் இருந்த கொள்ளையனை சுட்டு கொன்றுதான் பிடிக்க முடிந்தது.

    என்கவுண்டர் செய்யப்பட்ட கொள்ளையனின் பெயர் முர்தாஷா என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த முர்தாஷாவும், நைம் அக்தர் என்ற மற்றொரு கொள்ளையனும் இணைந்தே வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

    பெண்ணிடம் நகை பறிப்பு

    பெண்ணிடம் நகை பறிப்பு

    ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பூதேரி பகுதியை சேர்ந்தவர் இந்திராணி இவர் ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று பணிக்கு வரும்போது வடமாநில இளைஞர்கள் இருவர் இவரிடம் வழி கேட்பது போல் அவரிடம் இருந்த 5 சவரன் நகையை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினார்.

    மிரட்டிய கொள்ளையர்கஙள

    மிரட்டிய கொள்ளையர்கஙள

    இந்திராணியின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் வழிப்பறிக் கொள்ளையர்களைப் துரத்தியபோது துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக பொதுமக்கள் பயந்து நின்று விட்டதை சாதகமாக்கி பென்னலூர் ஏரிப் பகுதியில் இருவரும் ஓடி மறைந்தனர்.

    தேடுதல் வேட்டை

    தேடுதல் வேட்டை

    இந்த சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூர் காவல்துறைக்கு தெரிவித்ததன் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் நேற்று 5 மணி நேரம் அப்பகுதியை சுற்றி வளைத்தனர் போதிய வெளிச்சம் இன்மை காரணமாக இன்று காலை மீண்டும் கொள்ளையர்களைத் தேடும் பணி துவங்கியது.
    அந்தக் காட்டுப் பகுதியில் அனைத்து வழிகளிலும் 10க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    ட்ரோன் கேமரா

    ட்ரோன் கேமரா

    கொள்ளையர்களின் நடமாட்டத்தை கண்காணிக்க ஐந்த ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டது. இந்நிலையில் மேவலுற்குப்பம் அருகில் அப்பகுதியில் மர்ம நபர் உலவுதாக வந்த தகவலின் பேரில் ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையை சேர்ந்த காவலர் அப்பகுதிக்கு சென்ற போது அவர்களை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்ப முயன்றதாக தெரிகிறது.
    இதில் லாவகமாக தப்பிய காவலர்கள் அவன் சற்றும் எதிர்பாராத நேரத்தில் சுட்டனர்.

    துப்பாக்கி பறிமுதல்

    துப்பாக்கி பறிமுதல்

    காவல்துறையினரின் துப்பாக்கி குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானார். பலியானவர் உடலை பரிசோதித்ததில் அவர் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த முர்தாஷா என்பதும் தெரிய வந்தது. சுட்டுக்கொல்லப்பட்ட முர்தஷாவிடம் இருந்து துப்பாக்கி மற்றும் நகைகள் மற்றும் 5 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவனுடன் பதுங்கியிருந்த நைம்அத்தர் என்பவரையும் காவல்துறையின் கைது செய்துள்ளனர்.

    ரகசிய இடத்தில் விசாரணை

    ரகசிய இடத்தில் விசாரணை

    கைது செய்யப்பட்டுள்ள நைம் அக்தரிடம் ஒரகடம் அரசு மதுபான கடையில் விற்பனையாளர் கொலை செய்ததும், ஊழியர் உடலிலிருந்து துப்பாக்கி குண்டு அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டது ஆகிய இந்த சம்பவத்தில் இவர்கள் தொடர்பு இருக்கிறதா என கோணத்தில் காவல்துறை விசாரணை மேற்கொண்டனர். ரகசிய இடத்தில் வைத்து தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வட மாநில கொள்ளையர்களில் ஒருவர் என்கவுண்டர் செய்து கொல்லப்பட்டது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+