வதந்திகளை நம்பாதீங்க.. குரூப் 2 ரிசல்ட் எப்போது?.. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ரிசல்ட் தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் குரூப் 2 ரிசல்ட் எப்போது வெளியாகும் எனவும் அந்த தேர்வாணையம் விளக்கம் அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் அரசு பணிகளுக்கான ஆட்சேர்ப்பு டிஎன்பிஎஸ்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குரூப் 2, 2ஏ தேர்வுகள் டிஎன்பிஎஸ்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.
மொத்தம் பல்வேறு துறைகளில் 5413 பதவிகளுக்கான குரூப் 2/2ஏ முதல்நிலை தேர்வு கடந்த மே மாதம் 21ம் தேதி தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது.

தாமதமாகும் தேர்வு முடிவு
இந்த தேர்வுக்கு மொத்தம் 11 லட்சத்து 78 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்தனர். இதில் 9.94 லட்சம் பேர் இந்த தேர்வு எழுதினர். முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முகத் தேர்வு வகைகளில் ஆட்சேர்ப்பு நடக்கிறது. சில பதவிகளுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது. முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியாவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.

பரவும் வதந்தி
அக்டோபர் மாதம் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. இந்நிலையில் தான் தேர்வு முடிவுகள் குறித்து பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் டிஎன்பிஎஸ்சி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி செயலாளர் உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி விளக்கம்
டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ஒருங்கிணைந்த குடிமை பணிகளுக்கான தேர்வு II/II A (தொகுதி II/II A)ற்கான முதல்நிலை எழுத்துத்தேர்வு கடந்த 21.05.2022ல் நடைபெற்றது. இதற்கிடையே மகளிருக்கான இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பல்வேறு வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன. இநு்த வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பினை வழங்கிய நிலையில் அதனை நடைமுறைப்படுத்வுது தொடர்பாக பல்வேறு கட்ட கலந்தாலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

எப்போது ரிசல்ட்?
இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற மென்பொருளில் உரிய மாற்றங்கள் செய்யப்பட்டு நிறைவடையும் தருவாயில் உள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. அப்பணி நிறைவுற்ற பின்னர் தேர்வின் முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர்பாக செய்தி சமூக ஊடகங்களில் வெளிவரும் ஆதாரமற்ற தகவல்களை நம்ப வேண்டாம் எனவும், அதிகாரப்பூர்வமான தகவல்களுக்க தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தினை www.tnpsc.gov.in மட்டுமே அணுக வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications