அடேங்கப்பா.. டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு.. 92 பணிக்கு விண்ணப்பித்தவர்கள் எவ்வளவு பேர் தெரியுமா?
சென்னை: டிஎன்பிஎஸ்சி சார்பில் 92 பணிக்கான குரூப் 1 தேர்வுக்கான விண்ணப்ப தேதி நேற்றுடன் முடிவடைந்த நிலையில் மொத்தம் 3.16 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளதாகவும், விண்ணப்ப திருத்தத்துக்கு 3 நாட்கள் அவகாசம் வழங்கப்பட உள்ளதாகவும் டிஎன்பிஎஸ்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் அரசு பணிகளுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி சமீபத்தில் குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு மூலம் மொத்தம் 92 பணியிடங்கள் நிரப்ப முடிவு செய்யப்படடது. துணை கலெ க்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு, வணிக வரி உதவி கமினஷர் உள்பட பல்வேறு துறைகளில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளன.

92 பணியிடங்கள் என்னென்ன?
அதன்படி துணை கலெக்டர் பணிக்கு 18, துணை போலீஸ் சூப்பிரண்டு பணிக்கு 26, வணிக வரி உதவி கமிஷனர் பணிக்கு 25, கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர் பணிக்கு 13, கிராமப் மேம்பாட்டு உதவி இயக்குனர் பணிக்கு 7, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பணிக்கு 3 இடங்கள் என மொத்தம் 92 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது.

நேற்று கடைசி தேதி
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.56,100 முதல் 2 லட்சத்து 5 ஆயிரத்து 700 வரை மாத ஊதியமாக கிடைக்கும். விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் ஏதேனும் ஒரு படிப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் tnpscexams.in இணையதளம் மூலம் 22.08.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிப்பு செய்யப்பட்டது. அதன்படி நேற்று தேர்வுக்கான விண்ணப்ப தேதி முடிவடைந்தது.

3.16 லட்சம் பேர் விண்ணப்பம்
இந்நிலையில் தான் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு மொத்தம் 3.16 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி சார்பில் கூறப்பட்டுள்ளது. அதாவது மொத்தம் 92 பணியிடத்துக்கு 3,16,678 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர் என்று டிஎன்பிஎஸ்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வு அக்டோபர் மாதம் 30ம் தேதி நடக்க உள்ளது. அதனை தொடர்ந்து மெயின் தேர்வு நடைபெறும்.

விண்ணப்ப திருத்த அவகாசம்
இதற்கிடையே ஆகஸ்ட் 27 முதல் 29 வரை விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய விண்ணப்பத்தாரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது அதன்படி விண்ணப்ப திருத்தத்த்தை விண்ணப்பத்தாரர்கள் 27.08.2022 மதியம் 12 மணி முதல் 29.08.2022 மதியம் 11.59 வரை மேற்கொள்ள முடியும் என டிஎன்பிஎஸ்சி கூறியுள்ளது.
-
மத்திய பாதுகாப்பு படையில் ஹெட் கான்ஸ்டபிள் வேலை.. 233 காலியிடங்கள்! 81 ஆயிரம் சம்பளம்! விட்றாதீங்க -
மாதம் 1 லட்சம் சம்பளத்தில் வங்கியில் வேலை.. பிஇ தகுதி தான்.. இன்னும் 2 நாள் தான் இருக்கு! -
IT Jobs: ரூ.8 லட்சம் வரை சம்பளம்.. வீட்டில் இருந்தும் வேலை செய்யலாம்.. அசத்தலான சான்ஸ் -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
IT JOBS: அனுபவம் வேண்டாம்.. டிகிரி இருந்தாலே போதும்.. Accenture-ல் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல!












Click it and Unblock the Notifications