பிரமாண்டமாக நடக்கும் திமுக இளைஞரணி கூட்டம்.. இரவே வந்து ஏற்பாடுகளை பார்வையிட்ட உதயநிதி ஸ்டாலின்!
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் கூட்டம் இன்று (டிசம்பர் 14) நடைபெறும் நிலையில், முந்தைய நாள் இரவே திருவண்ணாமலைக்கு வந்து, கூட்டத்திற்கான முன்னேற்பாட்டு பணிகளை நேரில் பார்வையிட்டார் திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின்.
தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கானப் பணிகளைத் தீவிரமாகச் செய்துவருகிறது திமுக. இந்த நிலையில், திமுக இளைஞரணியின் வடக்கு மண்டல நிர்வாகிகள் கூட்டம் இன்று (டிசம்பர் 14) திருவண்ணாமலையில் நடைபெறுகிறது. இதில் 1.30 லட்சத்துக்கும் அதிகமான நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். இந்தச் சந்திப்பில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றவிருக்கிறார்.

இந்நிலையில் நேற்று (டிசம்பர் 13) இரவு நிகழ்ச்சி நடைபெறும் இடமான வாணியந்தாங்கலுக்கு திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் வந்தடைந்தார். திருவண்ணாமலை வந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப்பணிகள் துறை அமைச்சர் எ.வ.வேலு வரவேற்றார். அதைத்தொடர்ந்து இளைஞரணி நிர்வாகிகளின் மண்டல கூட்டம் நடைபெறும் இடத்தில் முன்னேற்பாடுகள் தொடர்பாக ஆய்வு செய்தார் உதயநிதி ஸ்டாலின்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், “வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் கிளை- வார்டு- பாகங்களுக்கு புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் 1 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் சந்திப்பு திருவண்ணாமலையில் மிக பிரமாண்டமான வகையில் நாளை நடைபெறவுள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாட்டு பணிகளை இன்று நேரில் பார்வையிட்டோம்.
வருகை தரும் அனைவரின் பாதுகாப்பையும் உறுதிசெய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ள விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்து, தற்காலிக மருத்துவமனையை செயல்பாட்டுக்கு திறந்து வைத்தோம்.
📌தி.மு.கழக வரலாற்றை விளக்கும் வரலாற்று புகைப்பட கண்காட்சி
📌கழக முன்னோடிகள் பற்றிய குறிப்புகள் அடங்கிய புகைப்பட கண்காட்சி
📌கழக இளைஞர் அணியின் 45 ஆண்டு கால பயணத்தை விளக்கும் புகைப்படங்களின் அணிவகுப்பு
📌முத்தமிழறிஞர் பதிப்பக அரங்கம்
📌கழகத் தலைவர் ஸ்டாலின் சிறப்புரையாற்ற போகும் மேடை அமைப்பு… ஆகியவற்றை ஒருவொன்றாக பார்வையிட்டு ஆய்வு செய்தோம்.
New Dravidian Stock உங்களை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்! அனைவரும் பாதுகாப்பாக கலைஞர் திடலை வந்தடையுங்கள்!” எனத் தெரிவித்துள்ளார்.
திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகளின் இந்தச் சந்திப்பில், 29 கட்சி நிர்வாக மாவட்டங்களில் உள்ள 91 சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த சுமார் 1,30,329 கிளை- வார்டு- பாக நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். இந்தச் சந்திப்பில் கட்சியின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற இருக்கிறார்.
இதற்காக 135 ஏக்கர் அளவில் திடல் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 5000-க்கும் மேற்பட்ட பேருந்துகளையும் வாகனங்களையும் நிறுத்துவதற்கு இடவசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வருகை தரும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகளுக்குப் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
-
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
181–189 தொகுதிகளில் வெற்றி.. மீண்டும் வெல்லும் திமுக கூட்டணி.. அதிமுக – தவெகவிற்கு ஷாக் தந்த சர்வே -
உசிலம்பட்டி ஐயப்பன் சசிகலா கட்சியில் இணைந்தார்.. அதே தொகுதியில் வேட்பாளராக அறிவிப்பு! -
176 தொகுதிகளில் உதயசூரியன்! சீர்காழி தொகுதியிலும் தனிச் சின்னம் வேண்டாம்.. வைகோ எடுத்த அதிரடி முடிவு -
சுந்தர்.சி வேட்பாளர் ஆனதற்கு எதிர்ப்பு.. புதிய நீதி கட்சியின் அமைப்புச் செயலாளர் திடீர் விலகல்! -
சிதறும் கிறிஸ்தவ வாக்குகள்? தமிழகத்தில் இதுவரை நடக்காத சைலண்ட் மாற்றம்! கள நிலவரம் என்ன? -
விஜய் செல்வாக்கு + பதவி.. திருமாவளவன் மாநில அரசியலுக்கு திரும்புவதற்கு பின்னணியில் 2 காரணங்கள்! -
சென்னையின் அடுத்த மேயர் நீங்கள் தானா? கேள்வி வந்ததும் திவ்யா சத்யராஜ் முகத்தில் அவ்வளவு சிரிப்பு! -
கோவை தெற்கு மட்டுமல்ல 10 தொகுதிகளிலும் இறங்கியடிக்க போகும் செந்தில் பாலாஜி.. அதிமுக பாஜக ஷாக் -
அதிமுகவை பாஜக விலைக்கு வாங்கிவிட்டது.. திருவாரூரில் தேர்தல் பரப்புரையை தொடங்கிய ஸ்டாலின்! ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications