என்னாச்சு? சட்டென கனிமொழி டாப்பிக்கை கையில் எடுத்த உதயநிதி.. இது நல்லாருக்கே! உற்று பார்த்த ஸ்டாலின்
சென்னை: நேற்று திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் பேசிய டாப்பிக் ஒன்று அதிகம் கவனம் பெற்றுள்ளது.
Recommended Video
தமிழ்நாடு சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டாம் கட்ட அமர்வு தற்போது நடைபெற்று வருகிறது. பல்வேறு துறை மீதான மானிய கோரிக்கைகள் விவாதங்கள் இதில் நடைபெற்று வருகிரியாது. இந்த அமர்வு மே 10ஆம் தேதி வரை நடைபெறும்.
இதில் பல்வேறு மானியக்கோரிக்கைகள் மீதான விவாதங்கள் ஒவ்வொரு நாளும் நடைபெற்று வருகின்றன. இன்று சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மானியக்கோரிக்கை நடைபெறுகிறது.

என்ன
நேற்று சமூக நலத்துறை மானியக்கோரிக்கையில் விவாதம் நடைபெற்றது. இதில் திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது 40 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற திருநங்கையர்களுக்கு மாதந்தோறும் ரூ 1000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இதை எல்லா வயது திருநங்கையர்களுக்கும் வழங்க வேண்டும். திருநங்கையர் அனைவரையும் ஆதரவற்றவர்கள் என கருதி அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.

18 வயது
18 வயதுக்கு மேற்பட்ட திருநங்கையர்களுக்கு இந்த உதவி கிடைக்கும் வகையில் வழி செய்ய வேண்டும். ஏனென்றால் ஒருவர் திருநங்கை/திருநம்பி என்று அறிந்து அதை வீட்டில் சொன்னதும் அவர்கள் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு விடுகிறார்கள். பலர் இப்படி ஆதரவற்றவர்களாகிவிடுகிறார்கள். பலர் சாலைகளில் உதவி வேண்டி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

உதவ வேண்டும்
இதனால் 18 வயதில் இருந்தே அவர்களுக்கு உதவினால் நன்றாக இருக்கும். திருநங்கைகளாக உள்ள அனைவரையும் வாரியத்தில் சேர்க்க வேண்டும். இதற்கான அடையாள அட்டையை 18 வயதில் இருந்தே வழங்கவேண்டும். திருநங்கைகளாக பள்ளி பருவத்தில் உணரும் நபர்களுக்கு ஆசிரியர்கள் மூலம் கவுன்சிலிங் உதவிகளை செய்யவும் வழி ஏற்படுத்த வேண்டும். அதும் மட்டுமின்றி அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்த வகை செய்ய வேண்டும்.

கோவில்
கோவில்களில் திருநங்கையர்களையும் பணியில் அமர்த்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டார். பொதுவாக திமுக எம்பி கனிமொழி தொடர்ந்து இது போன்ற விஷயங்களில் ஆர்வமாக கருத்து தெரிவிப்பார். பெண்கள், திருநங்கைகள் தொடர்பான கருத்துக்களை, கோரிக்கைகளை நாடாளுமன்றத்திலும், பொது இடங்களிலும் கனிமொழிதான் வைப்பது வழக்கம். நேற்று கனிமொழியின் இந்த டாப்பிக்கை கையில் எடுத்து அதை சட்டசபையில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

சந்திப்பு
சமீபத்தில் திருநங்கையர் நாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலினை திருநங்கைகள் சிலர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். திருநங்கைகள் நல வாரிய உறுப்பினர்கள் ரியா, சுதா, கேத்ரினா, செல்வி சாந்தோசம், மோனிகா ஆகியோர் இந்த சந்திப்பில் உடன் இருந்தனர். முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு சென்ற திருநங்கைகளை முதல்வர் ஸ்டாலின் வரவேற்று விருந்தினர்கள் அறையில் அமர வைத்து பேசினார். இந்த நிலையில்தான் திருநங்கையர் பற்றி உதயநிதி ஸ்டாலின் சட்டசபையில் பேசி உள்ளார்.

ஸ்டாலின்
நேற்று உதயநிதி ஸ்டாலின் இந்த விஷயத்தை கையில் எடுத்து தனது சட்டசபையில் இப்படி பேசியதை திமுக உறுப்பினர்கள் பலரும் ஆர்வமுடன் கேட்டனர். ஏனென்றால் உதயநிதி ஸ்டாலின் அதிகமாக சட்டசபையில் மானியக்கோரிக்கைகளில் கேள்விகள் எழுப்பியது இல்லை. இந்த நிலையில்தான் உதயநிதி ஸ்டாலின் நேற்று பேசிய போது அதை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்ட பலர் உற்று பார்த்துக்கொண்டு இருந்தனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications