EXCLUSIVE: கைகளை சுத்தமாக வைத்து கொள்ளுங்கள்.. எதுவும் நம்மை அண்டாது.. வலியுறுத்தும் கீ ஸ்டோன்!
உலக கை கழுவும் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவையில் நடைபெற்று வருகிறது.
Recommended Video

சென்னை: "நம் கைகளை சுத்தமா வெச்சுக்கிட்டாலே பெரும்பாலான நோய்கள் நம்மை தீண்டாது" என்று சொல்கிறார் வினிதா. யார் இந்த வினிதா? கைகளை கழுவ சொல்லி வேண்டுகோள் விடுக்கும் நோக்கம் என்ன?
தமிழ்நாடு நகர்ப்புற சுகாதார மேம்பாட்டு உறுதுணை திட்டத்தின் (TNUSSP) கீழ் பங்காற்றி வரும் கீஸ்டோன் அறக்கட்டளையின் ஒருவராக இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
இதுகுறித்து "ஒன் இந்தியா தமிழ்" சார்பில் அவரிடம் கேட்கப்பட்டது. அப்போது வினிதா பேசும்போது தெரிவித்தாவது: "பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன் (BMGF) தமிழ்நாட்டின் சுகாதார திட்டத்தை நிறைவேற்றுவதற்காக ஒரு தொழில்நுட்ப உதவி பிரிவு (TSU) அமைத்து நகராட்சி ஆணையம் மற்றும் நீர் வழங்கல் துறைக்கு ஆதரவளிக்கிறது.

மனித கழிவுகள் சுத்திகரிப்பு
இந்த பிரிவு நகர்ப்புற சுகாதாரத்தை மேம்படுத்துவதில் மாநிலத்திற்கு ஆதரவளிப்பதோடு, பெரியநாயக்கன்பாளையம் மற்றும் நரசிம்மநாயக்கன் பாளையம் ஆகிய இரண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மாதிரி இடங்களில் சுகாதார முழு சுழற்சியில் பணியாற்றி வருகிறது. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாக மனித மலக்கழிவுகளை பாதுகாப்பான முறையில் கையாளுதல், அதனை எடுத்துச் செல்லுதல் மற்றும் மனித கழிவுகளை முறையாக சுத்திகரித்தல் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.

செய்முறை விளக்கம்
இந்த நோக்கத்தின் ஒரு பகுதியாக, கோவை சரவணம்பட்டியில் உள்ள ப்ரோசோனில் நேற்று முதல் 3 நாட்களுக்கு அதாவது 16-ந் தேதி வரையில் சர்வதேச கைகழுவுதல் தினத்துக்காக ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தி வருகிறோம். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஹேண்ட் பிரிண்ட் அதாவது வண்ணங்களின் மூலம் கை அச்சுக்களை பதிக்கும் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. மேலும் சுகாதார விழிப்புணர்வு பாடல் மூலம் முறையாக கை கழுவுதல் பற்றிய செய்முறை விளக்கமும் இதில் எடுத்துரைக்கப்பட்டு வருகிறது.

வீதி நாடகங்கள்
இதை தவிர, இன்றும் நாளையும், குடிசைப் பகுதிகளுக்கு சென்று வீதி நாடகங்களை அரங்கேற்றி அதன்மூலம் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி போகிறோம். இதற்காக பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள விவேகானந்தபுரம் மற்றும் நரசிம்மநாயக்கன்பாளையம் போன்ற குடிசைப்பகுதிகளை தேர்ந்தெடுத்தும் இருக்கிறோம். மக்களுக்கு சுகாதாரத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதே எங்கள் ஒரே நோக்கம்" என்று சொல்லி முடித்தார் வினிதா.

வண்ண வண்ண கைகள்
கை கழுவும் தினத்தை இவ்வளவு சிறப்பான முறையில் விழிப்புணர்வு நடத்தி மக்களிடம கொண்டு சேர்க்க முயலும் கீஸ்டோன் அறக்கட்டளைக்கு வாழ்த்துக்களைதான் அவசியம் சொல்ல வேண்டும்!! வெள்ளை நிற பரந்து விரிந்த துணியில் வண்ண வண்ண நிறங்களால் பொதுமக்கள் தங்கள் கைவிரல்களை பதித்து இந்த விழிப்புணர்வில் ஆர்வத்துடன் பங்கேற்று வருவது பார்ப்பதற்கே மகிழ்ச்சியாக உள்ளது!!
-
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்!












Click it and Unblock the Notifications