சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டமால்.. டுமீல்.. அடுத்த ஒரு மணி நேரம் முக்கியம்.. 4 மாவட்டங்களில் வெளுக்கபோகும் மழை.. வானிலை அப்டேட்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த ஒரு மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் இடியுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் இந்த மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

தமிழகத்தில் மழை நிலவரம், மழை வாய்ப்பு குறித்து வானிலை ஆய்வு மையம் உன்னிப்பாக கவனித்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

நாளை புதிய “சோர்ஸ்”.. மாறிய “ஸ்பீடு”! இன்னும் 4 நாள் மழை.. புதிய தாழ்வு நிலை -வெளியான வானிலை அப்டேட் நாளை புதிய “சோர்ஸ்”.. மாறிய “ஸ்பீடு”! இன்னும் 4 நாள் மழை.. புதிய தாழ்வு நிலை -வெளியான வானிலை அப்டேட்

காற்றழுத்த தாழ்வு பகுதி

காற்றழுத்த தாழ்வு பகுதி

இந்நிலையில் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் 18ம் தேதி வலுப்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

4 நாள் மிதமான மழை

4 நாள் மிதமான மழை

இதனால், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. இதனால் 19ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும் என கணிக்கப்பட்டு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றுவானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

 அடுத்த ஒரு மணி நேரம் மழை

அடுத்த ஒரு மணி நேரம் மழை

இந்நிலையில் தான் தமிழ்நாட்டில் அடுத்த ஒரு மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் இடியுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி கோவை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடியுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என இன்று காலை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

 மீனவர்களுக்கு எச்சரிக்கை

மீனவர்களுக்கு எச்சரிக்கை

மேலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று முதல் 3 நாட்களுக்கு தெற்கு அந்தமான் கடல் பகுதிகள், அதைஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீச வாய்ப்புள்ளது. இதனால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

English summary
The Meteorological Department has warned that light to moderate rain with thunder may occur in 4 districts in Tamil Nadu in the next one hour.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X